.

Loading...
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 நவம்பர், 2014

குமரி மாவட்டத்திற்கு இன்று 59-வது பிறந்தநாள்!


குமரி மாவட்டத்திற்கு இன்று 59-வது பிறந்தநாள்!

குமரித் தந்தை மார்ஷல் எ. நேசமணியின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தை திருவிதாங்கூரில் இருந்து மீண்டெடுத்து தாய்த் தமிழகத்துடன் இணைத்து இன்றுடன் (01-11-2014) ஐம்பத்தி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆயினும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்கின் குமரி மாவட்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. விவசாயம், நீர்வழிப் போக்குவரத்து, உயர்கல்வி, பன்னாட்டு விமானப் போக்குவரத்து, நிலவழிப் போக்குவரத்து, காற்று மண்டலம் மாசுபடுதலைத் தவிர்த்தல், ஆய்வு நிலையங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துல் போன்றத்துறைகளில் போதிய வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அரசுக்குத் தந்து, அவைகளைச் செயலாக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகிக்கள் இதுகாறும் உகந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளும், அரசியலாளர்களும் கூட இவைகளை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போய் விடுகின்றனர். எனவே, இம்மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பல திட்டக் குறிப்புகளை, இம்மாவட்டத்தை உருவாக்குவதில் குமரித் தந்தை மார்ஷல் நேசமணியுடனே தோளோடு தோள் நின்று தியாகங்கள் புரிந்த நாங்கள் மக்களின் பார்வைக்காகவும், அரசின் பரிசீலனைக்காகவும் இங்கே தருகிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டக்குறிப்பு:

பழைமை வாய்ந்த மன்னர் நாடான திருவிதாங்கூரின் தென் பாகங்களாக இருந்த தாலுகாக்களை, குமரித் தந்தை எ. நேசமணியின் வீரத்தலைமையின் கீழ் நின்று போராடிப் பிரித்துதெடுத்து, “கன்னியாகுமரி மாவட்டம்” என்ற பெயரில் 1956 நவம்பர் மாதம் முதல் நாளன்று தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற இப்பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து, அதற்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் எனப் பெயரிட்டு செயல்படுத்தத் தொடங்கியது மத்திய அரசு. இதன்படி முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1950 - 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேச வளர்ச்சிக்கு என வகுக்கப்பட்ட திட்டங்களை, பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டுஇறிகேஷன்(Lift irrigation) திட்டம், போன்ற முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்திருந்தனர். இந்த ஐந்தாண்டு திட்டத்தில் வகுக்கப்பட்டிருந்த திட்டங்களில் சிலவற்றையாவது செயல்படுத்துவதற்கும் திருவிதாங்கூர் அரசு சுணக்கம் காட்டியது. மக்கள் தலைவர்கள் பல வேளைகளில் வருந்தி வேண்டிக் கொண்டும், இப்பிரதேச வளர்ச்சித் திட்டங்களுக்காக ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை அரசு வேண்டுமென்றே வடதிருவிதாங்கூர் வளர்ச்சிக்கெனத் திருப்பி விட்டது. இதனால் தென்திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களை முற்றிலும். புறக்கணித்தது பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் மாநில பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, நாட்டைப் பிரிப்பதற்கான முதற்காரணமாக அமைந்தது என்பதும் உண்மை.

திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டு வந்தமையால் சாதி கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும் நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுப்படுத்தினர். இந்த மானங்கெட்ட வாழ்விலிருந்து முழு விடுதலை வேண்டியும் பிரிந்து செல்வதற்கு தமிழ் மக்கள் தயாராயினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

இந்த குறிக்கோள்கள் நிறைவேறும்படியாக, தமிழ்மக்கள் மலையாளி நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு சமுதாய மக்களுக்கு எதிராக விடுதலைப் போர் புரிந்தனர். 1948-ல் இப்போர் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அன்று செயலாற்றி வந்தார். இழிவு சமூகத்தாரின் பல்வேறு சமுதாய மறுமலர்ச்சியால் பொறாமைத் தீயை தமிழ்மக்கள் எதிராக வளர்த்துக் கொண்டு இவர்களின் மேல் அடக்குமுறைக் கொடுமைகளை அவிழ்த்துவிட்டார் திரு.தாணுபிள்ளை. மங்காட்டில் திரு.தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் திரு.செல்லைய்யன் நாடாரையும் மலையாளிக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சமுதாயத்துக்கும், நாயர் சமுதாயத்திற்கும் முட்டலும், மோதலும் நடந்த வண்ணமிருந்தன. நாயர்களுக்கு பட்டம் தாணுபிள்ளையும் அவர்களின் அரசு இயந்திரங்களும் ஆதரவுக்கரம் அளித்தது. இந்த சுசூழ்நிலையில் 1954 ஆகஸ்டு 11-ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்கள் முழுவதிலும் “விடுதலைதினம்” கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்திலும் பட்டம் தாணுபிள்ளைதான் திருவிதாங்கூர் நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின்டி தமிழர்கள் மீது இரண்டாவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாளி காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறு பேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிபட்டு உயிர் நீத்தனர். துப்பாக்கிச் சூட்டுடனே பட்டம் தாணுபிள்ளையின் நரவேட்டை நின்று விடவில்லை. இதைத் தொடர்ந்து, பட்டம் தாணுபிள்ளையின் வீழ்ச்சி நாள் (14.02.1955) வரை அதாவது 188 நாட்கள் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களில் தமிழ் மக்கள் மீது போலீஸ்காரர்கள் நரவேட்டையாடினர். அனேகர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் அடைந்த சிறைத் துயரங்களை அறிந்து கொள்வதற்கு அறிவர் டி.பீட்டர் அவர்கள் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான “குமரி மாவட்ட விடுதலை (கல்குளம் – விளவங்கோடு) நாடார் மக்கள் தந்த விலை (1948 – 1954)” என்ற நூலைப் படித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், பஞ்சாப்பில் நடந்த “ஜாலியன் வாலாபாக் படுகொலைதான்” மிகவும் கொடுமையானது என்று இந்தியா வரலாறு பறைசாற்றுகிறது. ஆனால் அந்த கொடுமை ஒரே நாளில் முடிந்து விட்டது. அடுத்த நாள் தொட்டு ஆங்கிலப் படை அமைதி காத்தது. ஆனால் _பட்டம் தாணுபிள்ளை அரசின் காவல்துறையினபர் 11.08.1954 தொட்டு 188 நாட்கள் அதாவது 6 மாதங்களும் 8 நாட்களும் தொடர்ந்து தமிழ் மக்களை மட்டும் குறி வைத்து நரவேட்டையாடினர். இது போன்ற நரவேட்டை உலக வரலாற்றில் எங்கும் காண்பது அரிது. இந்த அட்டூழியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பது பிரிந்து செல்வதற்கான மூன்றhவது காரணமாக அமைந்தது.

குமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர். குறிப்பிட்டுக் கூறுவதென்றால், இளைஞர் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு வேதனையாக உள்ளது. இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் தமிழ் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக தமிழ் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் தமிழ் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.இதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் பாசத்தோடு குமரி மாவட்டத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.

இவைகளின் தொடர்ச்சியாக 01.11.1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று (01.11.1956) தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், நாகர்கோவில் S.L.B கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்ப்பு விழாவில் இவ்வாறு ஏற்புரையாற்றினார்்-

“நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடுனே சேருவதாற்கு நான் ஒழுங்கு செய்யலாம்” என்றார்.

குமரி மாவட்டத்தை தமிழ்நாடு அரசு அன்று முதல் புறக்கணிக்கத் தொடங்கியதிலிருந்து, இன்று வரை இதை புறக்கணித்து வரப்படுகிறது. இதற்குப் பிறகு நெல்லைதான் தமிழகத்தின் எல்லையாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் அரசியல் முறையில் ஆறுசட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் மாண்புமிகு அமைச்சராகவும் உள்ளார். இருப்பினும் இம்மாவட்டத்தின் முழு வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல், முக்கியத்துவமில்லாத காரியங்களை மட்டுமே செய்து வருவதால், இம்மாவட்டம் காலத்திற்கேற்றற்ப் போன்று, மக்கள்த் தொகைக்கு ஏற்றார்ப் போன்று சமச்சீரான வளர்ச்சி அடையவில்லை.

எனவே மாவட்டத்தின் சமச்சீர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, செயலாக்கம் பெற வேண்டிய சில முக்கிய திட்டங்களை இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு முன்பு நாம் திருவிதாங்கூரில் இருந்த வேளையில், இதே போன்ற திட்டப் பிரேரணைகள் தரப்பட்டுள்ளன. “The South Travancore People’s Economic Development Council” என்ற ஒரு நிபுணர் குழாம் இத்தகையதோர் பிரேரணையைத் தந்ததுண்டு. இக்குழாமில், திருவாளர்கள் T.V. கிருஷ்ண ஐயர், எஸ். நத்தானியேல், எஸ்.சிவராம கிருஷ்ண ஐயர், எஸ்.டி.பாண்டிய நாடார், ஆர்.சுப்பிரமணிய பிள்ளை, என்.அகஸ்திய லிங்கம் பிள்ளை, அறிவர் பி. நடராஜன் போன்ற மேன்மக்கள் அடங்கியிருந்தனர். அதற்குப் பிறகு குமரி மாவட்டம் உருவான வேளையிலும் வறண்டப் பூமியான விளவங்கோடு தாலுகாவின் வளர்ச்சியை முன் வைத்து ஒரு திட்டப் பிரேரணையை “The Vilavancode Taluk Welfare Association, Kuzhithurai” என்ற மக்கள் அமைப்பு உருவாக்கித் தந்தது.

மக்களின் இத்தகைய விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்துக்காக பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இறிகேஷன் திட்டம் போன்றவற்றை வகுத்து செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும் இந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இது தவிர சித்த மருத்துவத்துறையில் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாத்துறையை பொறுத்தமட்டில், நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் திட்ட காலக்கெடுவில் முடிக்கப்பட்டது. மேற்படி திட்டங்களை செய்து தர வேண்டும் என்று மக்கள் தங்களது அமைப்பு வழியாக கோரிக்கை வைத்ததனால் மட்டுமே மேற்படி திட்டங்களை செயல்படுத்தியது தமிழக அரசு.

இன்றைய சூழ்நிலையில், இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நன்மை பயக்கும் பல திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு அரசிடம் உகந்த திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கீழ் விவரிக்கின்ற திட்டங்களை தாமதமின்றி வகுத்து அரசு செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் நெருக்குதல் தர வேண்டும். அவ்வாறாயின் மட்டுமே இவர்கள் அரசுக்கு நெருக்குதல் தருவார்கள். ஒட்டு வங்கிக்காக அரசு செய்கின்ற Populist திட்டங்களால் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படாது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள்:

கன்னியாகுமரி மாவட்டம் 1684 சதுர கிலோ மீட்டர் (1.67,267 ஹெக்டர்) பரப்பளவைக் கொண்ட சிறிய மாவட்டம் ஆகும். தமிழகத்தின் பரப்பளவில் 1.29% மட்டுமாகிய இச் சின்னஞ்சிறிய மாவட்டத்தில் 62,520 ஹெக்டேர் நிலம் நெற் பயிருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் அளவு தற்சமயம் சுருங்கி விட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளது என்றா லும் இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று பாசன வசதிக் கொண்ட வயல்களில் ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் போன்ற பணப் பயிர்கள் நடவு செய்து அதை தோட்டங்களாக மாற்றப்பட்டதாகும். இரண்டாவது இந்த விளை நிலங்களை வேண்டுமென்றே தரிசு நிலங்களாக மாற்றியமைத்து அங்கே வீடுகளும், கல்வி நிலையங்களும், வியாபார கூடங்களும் கட்டியதுமாகும். பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த வியாபாரிகளும், உத்தியோகஸ்தர்களும் மற்றும் வெளி மாநிலத்து வசதிப்படைத்தவர்களும் இம்மாவட்டத்தில் தங்கு தடையின்றி குடியேறி வீட்டுமனைகளை அபரிமித விலை கொடுத்து கிரயம் பெற்று வீடுகள் கட்டி வருவதால் வயல்வெளிகள் விரைவாக சுருங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால், குமரி மாவட்டத்தில் உணவு உற்பத்தி இல்லை என்ற நிலை உருவாகிவிடும். இந்த நிலையை தடை செய்திட வேண்டும். இந்த நோக்கில் கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சில உருப்படியான நடவடிக்கைள் எடுத்து வருகின்ற போதிலும் அவைகளை மேலும் கடுமையாக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தில் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இம்மாவட்டத்தில் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் அதாவது 1956-ம் நவம்பர் 1-ம் நாள் குடியிருந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் போன்றோர் மட்டுமே சொத்துக்களை கிரய விக்கிரயம் செய்யலாம் என்ற ஒரு சரத்தை உருவாக்குவதன் மூலம் இந்த குடியேற்றக்காரர்களின் பிடியிலிருந்து இம் மாவட்ட பாசன நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.

இம்மாவட்டம் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கின்ற ஒரு மாவட்டமாகும். 75 விழுக்காடு மக்களும் நடுத்தர மற்றும் சிறிய விவசாயிகள் ஆவர். விவசாயத்தைச் சார்ந்த பணியாளர்களும் இங்கே அதிகம் உள்ளனர். எனவே இவர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு, வயல்நிலைகளை வேறு உபயோகத்திற்காக பயன்படுத்துவததை நிரந்தரமாக அரசு தடை செய்திட வேண்டும். இம்மாவட்டத்தில் சுமார் 950 விவசாயக் குளங்கள் மன்னர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் பரப்பளவும் ஆழமும் தேவைக்கேற்றபடி அன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பல குளங்களை நிரத்தி மாற்றுத் திட்டங்களுக்காக அவைகளை அரசே பயன்படுத்திவிட்டன. எஞ்சியவைகளில் தாமரைச் செடியை பஞ்சாயத்துக்கள் பயிரிட்டு, அதன் மூலம் வருவாய் தேடுகின்றனர். தாமரை பயிரிடுகின்ற குளங்கள் தற்சமயம் முற்றிலும் தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே தாமரைச் செடிகளை அகற்றி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதற்கென திட்டம் ஒன்றை அரசு வகுத்து, போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். கீழ் குறிப்பிடுகின்ற விவசாய நோக்குடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு உடனடி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் இந்த திட்டங்களுக்கு மட்டுமே, தங்களது தொகுதி வளர்ச்சி நிதியை செலவிட வேண்டும்.

1. நெய்யாறு இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத் திட்டம் நிறைவேற்றுதல்:

இந்த கால்வாய் கேரள எல்லையில் கட்டப்பட்டிருக்கின்ற நெய்யாறு அணையில் இருந்து, தமிழ்நாடு எல்கையில் வருகின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப்பாகப் பாசனத்துக்கான இருநாட்டு அரசுகளின் பங்கில் உருவாக்கப்பட்டதாகும். நெய்யாறு அணையின் நீர் பிடிப்பு இடங்கள் கேரள மாநிலத்திலும், தமிழ்நாடு மாநிலத்திலும் பரந்து கிடக்கின்றன. ஆகையால் இதை இரு மாநில அணைத் திட்டம் என்று கருதுவதே சரியானதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, இடதுகரை கால்வாய் வெட்டப்பட்டது.

நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் மொத்த நீளம் 38.4 கிலோ மீட்டர்கள். இதனால் 4,048.58 ஹெக்டேர் (10/000 ஏக்கர்) நஞ்சை நிலம் பாசன வசதி கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கால்வாயால் வறட்சியில் சிக்கித் தவிக்கின்ற விளவங்கோடு தாலுகாவின் மேற்குப் பாகத்திற்கு பாசன வசதி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த அணையால் கேரளத்தில் 9757.09 ஹெக்டேர் நஞ்சை நிலங்களும், தமிழ்நாட்டில் 4048.58 ஹெக்டேர் ஆயக்கட்டு நஞ்சை நிலங்களும், பாசனவசதி கிடைக்கும். இந்த அணையால் தமிழ்நாட்டை விட சுமார் இரண்டு மடங்கிற்கு மேலாக கேரளத்தில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் இந்த அணையை கட்டி முடிப்பதற்கும், கால்வாய் வெட்டுவதற்கும் மொத்தம் 143 லட்சம் ரூபாய் அன்று செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்காக ரூ.60 லட்சங்கள் 1963-ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கோப்புச் சொல்லுகிறது. இது தவிர விளவங்கோடு தாலுகாவில் வெட்டப்பட்டுள்ள கால்வாய்க்கு ரூ.92.28 லட்சம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. (பார்வை Kanyakumari District Gazetteer – 1995 – Page 306).

விளவங்கோட்டில் வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய், நெய்யாறு இடதுகரை கால்வாயில், பாறச்சாலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1½ பர்லாங் வடக்காக முள்ளுவிளை வார்டில் மாத்திரக்காவிளையில் தொடங்கப்பட்டுள்ளது. கேரளப் பகுதியில் செல்லுகின்ற பிரதான கால்வாயின் ஒரு சிறிய கிணைக் கால்வாயாகத்தான் இதை வெட்டியுள்ளதால் இதில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே வரும்படியாக அங்கே இரு ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இக்கிளை பிரிகின்ற பிரதான கால்வாயில் ஷட்டர் எதுவும் அமைக்கப்படவில்லை. இங்கே செல்லுகின்ற பிரதான கால்வாயில் இருந்து சுமார் 4 அடி தாழ்வாகத்தான் தமிழ்நாட்டுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால் அது பிற இடங்களில் அதளபாதாளத்திலூடே செல்ல வேண்டியதாயிற்று. அந்த 4 அடி தாழ்வை தவிர்த்து மெயின் கால்வாய் சமதளத்தைத் தொடர்ந்து வெட்டியிருந்தால் கூட இங்கே வெட்டப்பட்டிருக்கின்ற கால்வாய் சுமார் 10’ அடி வரை உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கலாம். அதனால் மேட்டுப்பாகங்களுக்கும் பாசனம் கிடைத்திருக்கும். எனவே இது ஒரு தவறான கால்வாய் அமைப்பு முறை (Defective Civil Engineering) என்று கூடக் கருதலாம். இந்த மாத்திரக்காவிளை இடம் கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கால்வாய் “சுந்தரிமுக்கு” என்ற இடத்தில்தான் உட்புகுகின்றது. இந்த சுந்தரிமுக்குக்கும், மாத்திரக்காவிளைக்கும் சுமார் 1½ பர்லாங் தூரம் உண்டு. அந்த இடத்தை நில உடமைகளிலிருந்து தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அறிகிறோம்.

இடதுகரைக்கிளைக் கால்வாய் வெட்டும் பணி 1959 ஜுலை மாதம் 27-ம் நாள் தொடங்கப்பட்டு 25.04.1963 அன்று தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் திரு.காமராசர் திறந்து வைத்தார். இக்கால்வாயால் மேற்கு விளவங்கோடு தாலுகாவின் முக்கிய குளங்களை மட்டும் இணைத்து தண்ணீர் பாய்ச்சுகிறது. இதனால் ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இருப்பினும் இக்கால்வாய் மிகவும் ஆழமாக வெட்டப்பட்டமையால் மேட்டுப்பகுதி பாசனத்துக்கு இது பயன்படவில்லை. எனவே இக்கால்வாய் வடிவமைத்ததில்Technical Flaw காணப்படுகின்றது.

இடதுகரைக் கால்வாய் தமிழ்நாட்டு எல்லையில் இரண்டு இடங்களைக் கடந்து செல்கிறது. இதில் முதல் இடம் பண்டாரக்கோணம் என்ற ஊராகும். இரண்டாவதாக, இது ஆலம்பாறை என்ற இடத்தில் கடந்து, மீண்டும் கேரள எல்லைக்குள் செல்கிறது. இவ்விடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் கேரள எல்கையான மாத்திரக்காவிளையில் கிளைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், சுமார் ஒன்றரை பர்லாங் தொலைவுக்கு தமிழ்நாடு அரசு பொன்னும் விலையும் கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. இதில் முதல் இடமான பண்டாரக்கோணம், மாத்திரக்காவிளையில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் வடக்காக உள்ளது. இந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு இடதுகரை கால்வாயைத் தொடங்கியிருப்பின் கால்வாயின் ஆழம் சராசரியாக 50 அடியாவது குறைந்திருப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். அவ்வாறு வெட்டப்பட்டிருந்தால் ஒரு வேளை சில தொட்டிப்பாலங்களும், சுரங்க அமைப்புகளும் கூடுதலாகத் தேவைப்பட்டிருக்கும். இதனால் மேட்டுப்பகுதி பாசனமும் கிடைத்திருக்கும். சிலவு சற்று கூடுதலாக இருந்தாலும், அதன் பயன்பாடு பெரிதாக இருந்திருக்கும். இவ்விடங்களில் இரப்பர் தோட்டங்களும், நெல் வயல்களும் புதிதாக உருவாகி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்த வளர்ச்சியை, எதிர்பார்த்த பயன் தராத நிலையில் கால்வாய் வெட்டுவதற்குக் காரணமாக இருந்த அந்நாள் பொறியாளர்கள் உருவாக்கி விட்டனர். இதற்கு ஏதாவது அரசியல் பின்னணி கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

தற்பொழுது இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதை பலகாலங்களாக தூர்வாரிப் பராமரிக்காமல் PWD இலாகா விட்டுவிட்டது. தவிரவும் கேரள அரசு பல்லாண்டுகளாக இக்கால்வாயில் தண்ணீர் விடாமல் தடுத்துவிட்டனர். எதற்காக தண்ணீர் தரவில்லை என்று தமிழக அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ ஆய்ந்தறியவில்லை. இதற்கு கேரள அரசு தமிழக அரசு மீது பழி சுமத்துகின்றனர். தண்ணீர் செஸ் (Cess) ஆக கேரளத்துக்கு தமிழகம் ரூபாய் 20 கோடி நிலுவையாக உள்ளது என்றும், பராமரிப்புக்கான பணம் கூட தரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது. இது உண்மையா அல்லது புரளியா என்று கூடத் தெரியவில்லை. தமிழக அரசும் இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவுமில்லை. உண்மை எதுவானாலும், விளவங்கோடு மேற்குப்பாக விவசாயிகளுக்கு இந்த நெய்யாறு இடதுகரைக் கால்வாயால் எப்பயனும் இல்லை என்ற உண்மை நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசின் நிற் விசாரத்தன்மையால் உருவாகிவிட்டதாக அவ்வட்டார மக்கள் கருதுகின்றனர். எனவே இவ்வாட்டார விவசாயிகளின் நன்மையைக் கருதி இந்த இடதுகரைக் கால்வாய்க்கு மாற்றுத்திட்டம் ஒன்றை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

02.09.2010 அன்று நடந்த குமரிமாவட்டத் திட்டக்குழுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் திரு.முத்துசாமிகுமாரன் பேசுகையில், நெய்யாறு இடதுக்கரைப் பாசனத்திற்காக மாற்றுத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார். அவர் அறிவிப்புப்படி திற்பரப்பிலிருந்து வலதுகரை சானல் ஒன்று வெட்டி, நெய்யாறு இடதுகரை கால்வாயுடன் இணைத்துவிட்டால் மேற்கு விளவங்கோடு பாசனம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். இதனாலும் நெய்யாறு இடதுகரைச் சானலின் உயரம் கூடுவதற்கு வழியில்லை. திரும்பவும் அந்த அதளபாதாளநிலைதான தொடரும். இந்த கால்வாயால் பழைய பாசனக் குளங்களில் சிலதுகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்குமே தவிர இன்று மேட்டுப்பாகங்களாக வறண்டு கிடக்கின்ற பூமிக்கு பாசன வசதி கிடைக்காமல் போகும்.

எனவே புதிதாக தொடங்க திட்டமிட்டுள்ள திற்பரப்பு திட்டத்துக்கு பதிலாக சிற்றார் II நீர் தேக்கத்திலிருந்து உயர்வான பாகம் வழியாக புதிய கால்வாய் அமைத்தால் மேட்டுப்பாக பாசனம்(Highland Irrigation) கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற சிறிய தொட்டிப்பாலங்களும், குழாய் சுரங்கங்களும் இதற்குத் தேவைப்படும். நவீன விஞ்ஞான உலகில் இது சாத்தியமே. கங்கை நதியிலிருந்து, காவிரிக்கு கால்வாய் வெட்ட முடியுமென்றால், ஆழ்கடலில் சேதுக்கால்வாய் அமைத்திட முடியுமென்றால், இந்த திட்டம் வெகுசுலபமாக நிறைவேறிவிடும்.

இந்த திற்பரப்பு கால்வாய் திட்டம், 1879-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆயில்லியம் திருநாள் ராமவர்மா காலத்தில் (1860-1880) திவானாக இருந்த இராமையர் அமல்படுத்த எண்ணினார். அதற்காக மதிராசி P.W.D. இலாகாவில் முதல் நிலை பொறியாளராக பணியாற்றி இருந்த கொளேனால் மீடு என்பவரை வரவழைத்து ஆய்வு நடத்தியதாகவும், அதன் சாத்தியக்கூறு சுலபமானது இல்லை என்று கண்டு கைவிடப்பட்டதாகவும் அறிகிறோம். (Travancore State Manual – III by T.K. Velupillai page – 416). எனவே, தமிழக எல்லைக்குள் இருக்கின்ற நெய்யாறு அணை நீர் பிடிப்பு பாகங்களில் மழைகாலங்களில் உருவாகின்ற தண்ணீரை தடுப்புக்கால்வாய் மூலம் விளவங்கோடு மேற்குப் பகுதிக்கு திசை மாற்றி பாசனம் செய்தால் அதிக பயன் உள்ளதாக இருக்கும். இந்த மாற்றுத் திட்டத்தை அரசு பாpசீலிக்க வேண்டும் என்று வேண்டுகிறேhம். இது குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு நெருக்குத்தல் தந்து திட்டத்தை நிறைவு பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆகையால் நஞ்சை நிலங்களும், பாசனக்குளங்களும் மாற்றுத் தேவைகளுக்கு மாற்றப்படுவதை சட்டத்தால் நிரந்தமாக தடை செய்து, உணவு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதற்க்கு கீழ் சொல்லப்படுகின்ற நீர்பாசனத் திட்டங்களை உடனடியாக உருவாக்கிட வேண்டும்.

விவசாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்பட வேண்டிய முக்கிய புதுத் திட்டங்கள்:

1. முடங்கிக் கிடக்கின்ற நொய்யாறு இடதுகரை கால்வாய்க்கு மாற்றாக சிற்றாறு II நீர்த் தேக்கத்திலிருந்து புதிதாக கால்வாய் வெட்ட வேண்டும். 2. குமரிமாவட்டத்தில் உள்ள பாரம்பாpய விதைகனை பாதுகாத்தல் 3. நஞ்சை நிலங்களை மற்ற காரியங்களுக்காக மாற்றுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். 4. பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக கேரளம் மற்றும் வடநாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியேறுவதை தடை செய்து, அவர்கள் நிலம் வாங்குவதை நிரந்தரமாக தடை செய்திட வேண்டும்.

2. ஏ.வி.எம். கால்வாயை கன்னியாகுமரி வரை வெட்டி நீட்டுதல்:

அனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நொக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தெக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐ “It is to be regretted that the necessity arose for suspending the extension of the Southern canal towards the capital after clearing the line and making some progress in blasting and excavation. The Wurkullay (வர்கலை) junction canal was certainly entitled to prior attention, but it would have been more satisfactory if provision could have been made for simulataneoulsy carrying on both the works. But it seems that it could not be made at the time. It is to be hoped however, that the Chief Engineer will be in a position to resume erelong the work suspended”. (V. Nagam Aiya – The Travancore State Manual – Vol.III Page 231 & 232)

வர்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அஙகிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி பொக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.

இந்த திட்டம் நிறைவெறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த நீர்வழி பொக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.

இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

“There are proposals to examine how best this Inland water way can be developed” (Second F.Y.P. (1956‐61) K.K. District – Page – 53) இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐

1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபோக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும். 2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். 3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும். 4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும். 5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்:
வேண்டுகோள்:

1. ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திடத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும். 2. சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஹேலன் டெவிட்சன் அம்மையார் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும். 3. வள்ளியூரில் சர்வதேச விமானதளம் அமைத்தல்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றும் தொழில்துறையில் பிற மாவட்டங்களைப் போன்று இதுகாறும் முன்னேறவில்லை. வெளிநாட்டு முதலீடுகளும் இம்மாவட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர் வசதியாக வந்து போவதற்கு பன்னாட்டு விமானதளம் அங்கே இல்லாததேயாகும். சென்னையை எடுத்துக்கொண்டால் பன்னாட்டு விமானதளம் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாரளர்கள் புதிய புதிய தொழில்கள் தொடங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றனர். அதனால் பல்வேறு ரக பன்னாட்டு தொழில்கள் அங்கு தொடங்கப்பட்டு அனேகர் பயன்பெறுகின்றனர். சென்னை பெருந்தொழில் நகரமாக உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருப்பதேயாகும். ஆனால் தென் மாவட்டங்களில் இத்துறையில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. இருப்பினும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் இங்கேதான் அதிகமாக உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களும் அதிக அளவில் இங்கே உருவாகி வந்தாலும் இவர்கள் அனைவரும் வேலைக்காக சென்னைக்குதான் படை எடுக்கின்றனர். பன்னாட்டு விமானதளம் இல்லாதகுறையால் மட்டுமே பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற “நாங்குநேரி தொழில்பூங்கா” மற்றும் “நாகர்கோவில் ரப்பர் பூங்காக்கள்” பூக்காமலும் காய்க்காமலும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

ஆகையால் தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இம்மூன்று மாவட்டங்களின் நடு நாயகமாக விளங்குகின்ற வள்ளியூரில் ஒரு பன்னாட்டு ஜம்போ விமானதளம் அமைக்க வேண்டும். பன்னாட்டு ஜம்போ விமான தளத்தக்கு நீளமான ஓடுதளம் தேவை என்பதால் இதை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் சிறிதளவு கூட இல்லை. வள்ளியூர்ப் பகுதியில் சமநிரப்பான தாரிசு நிலங்கள் எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன. ஆகையால் இந்த பிரதேசம் பன்னாட்டு ஜம்போ விமானநிலையத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். நீள ஓடுதளங்களை அமைப்பதற்கு இயற்க்கையாக சமநிரப்பு நிலம் இங்கே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏனவே இதுகுறித்து நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.

இதனால் இம்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் குறிப்பாக IT பூங்காக்கள், உணவு வகைகள் பதனிடும் பூங்காக்கள் போன்ற நவீன தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இம்மாவட்டஙகளில் படித்த வேலையில்லாமல் இருக்கின்ற தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தவிரவும் இங்கே விளைகின்ற காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப்பொருட்கள், கடல் மீன்கள் போன்றவைகளை இங்கிருந்து நேரடியாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விவசாயிகள் அதிக பயன்பெறவும் வழிவகுக்கும். இப்போது இப்பொருட்களை கேரளமானிலம், திருவனந்தபுரம் விமானநிலையம் வாயிலகத்தான் தமிழக வியாபாhpகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

4. சுற்றுலா வளர்ச்சி:

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு அழகிய மாவட்டம். நீர்வளமும் நிலவளமும் மலைவளமும் ஒருங்கே அமையப்பெற்று கண்ணுக்கினிய இயற்கை வனப்புகளை அள்ளித்தருகின்ற ஒரு சிறிய நாடுபோல் காட்சி தருகிறது. இது பண்டைக் கால ஆய்நாட்டின் தென்பாங்களையும் நாஞ்சில் நாட்டை முழுமையாகவும் உள்ளடக்கிக்கொண்டு உலாவருகின்ற ஒரு அழகிய நாடாகும். தமிழ் இலக்கியங்களில் வகுத்துக் கூறப்பட்டிருக்கின்ற முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற நான்கு திணைகளைக்கொண்ட தமிழ் நிலமாகவும் இம்மாவட்டம் திகழ்கின்றது. ஆகவே இயற்கை அன்னையின் எழில் மிகு சுகவாசஸ்தலங்கள். இன்னும் பல, சுற்றுலா மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படாமல் உள்ளன. அவைகளையும் சீரமைத்து சாலை வசதிகளை மேம்படச் செய்தால் சுற்றுலாத்துறையை மேலும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். இத்தகைய இடங்களின் விவரங்கள் கீழ்தரப்படுன்றன.

i. முத்துக்குழிவயல் கோடை வாசத்தலம்:

இந்த குளிர்ச்சியான இடம் பெருச்சாணி நீர்தேக்கத்திற்கு மேலாக பாலமூர் தோட்டத்துக்கு வடகிழக்காக சுமார் 8 கி.மீ. தோலைவில் அமைந்துள்ளது. பறளி ஆறு இந்த இடத்தில் தான் உற்பத்தியாகிறது. சிலுசிலுத்தோடுகின்ற ஓடைகளை உள்ளடக்கி ரம்மியமான தட்பவெட்பம் கொண்ட குளு குளு இடமாகவும் இது அமைந்துள்ளது. கன்னியாகுமரியின் குற்றhலம் “திற்பரப்பு” நீர்வீழ்ச்சி என்றால், முத்துக்குழிவயல் கன்னியாகுமரியின் “கொடைக்கானல்” என்று வர்ணிக்கலாம். திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைகால வாசஸ்தலமாகவும் இது இருந்துள்ளது. அவர்கள் தங்குவதற்கென்று ஒரு கண்ணாடி மாளிகையும் அங்கேகட்டப்பட்டிருந்தது. இங்கே சிறுரகவிமானங்களும், கெலிக்காப்டரும் இறங்குவதற்கு வசதியாக ஒரு சமநிலைப்பரப்பு காணப்படுகிறது. இங்குச் செல்வதற்கு வசதியான சாலை பாலமூர் தோட்டம் வரை தனியார் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துநநி தடம் உள்ளது. அதை அரசோ அல்லது தனியார்களோ செம்மைப்படுத்தவில்லை. இந்த முத்துக்குழிவயலில் அனைத்து நவீன வசதிகளை உருவாக்கித்தந்து மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் இது நம்மாவட்டத்தின் “கொடைக்கானலாக” உருவாகும். இதனால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து. வருவாயும், வேலைவாய்ப்பும் பெருகும்.

ii. அணைகள் காட்சிக்கோபுரம் (Dam View Tower) அமைத்தல்:

கன்னியாகுமாp மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவைகள் முறையே பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மற்றும் சிற்றாறு-2 ஆகும். இது தவிர கேரள மாநிலத்தில் நெய்யாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. இவைகளையெல்லாம் ஒரே இடத்தில் இருந்து வெறும் கண்ணால் பார்ப்பதற்கு, இயற்கை ஒரு இடத்தை நமக்கு அன்பளிப்பாக அளித்துள்ளது. இந்த இடம் களியலிலிருந்து மருதம்பாறை செல்லுகின்ற பாதையில் “ஆனைநிரத்தி” என்ற இடமாகும. இந்த இடம் சற்று மேட்டுப்பாகமாக இருப்பதால் இங்கிருந்து பார்ததால் மேற்படி ஐந்து அணைகளையும் காணமுடிகிறது. இதில் ஒரு பார்வை கோபுரம்(Dam View Tower) அமைத்து அதில் தொலைநோக்கி உபகரணத்தையும் பொருத்திவிட்டால் தென்மானில ஐந்து அணைக்கட்டுகளை சுற்றுலாப்பயணிகள் ஒரே இடத்தில் இருந்து கண்டு பயன்பெறுவர். அதனால் அரசுக்கு அதிக வருவாயும் கிடைக்கும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அதிக வேலைவாய்புகளும் கிடைக்கும்.

iii. கோதையார் வாசஸ்தலம்:

இங்கேதான் கோதையாறு உற்பத்தியாகிறது. குளிர்ச்சியான இந்த இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்காக அனைத்து இயற்கைச் சூழல்களும் இங்கே காணப்படுகின்றன. இதமான தட்பவெட்பம், சமநிலம் நான்கு பக்கமும் உயர்ந்த குன்றுகள் போன்றவைகள் உள்ளன. அரசு இந்த இடத்தை மேம்படுத்தி இதை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக அமைத்திடவேண்டும். ஏனவே இந்த மூன்று இயற்கை இடங்களை மேம்படுத்தி நல்ல சாலை வசதிகைளயும் பிற அடிப்படை வசதிகளையும் உருவாக்கினால் இவ்விடங்கள் புகழ்மிக்க சுற்றுலா தலங்களாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எடுத்துக்கூறி நெருக்குதல் தந்து இவ்விடங்களை புகழ்மிக்க சுற்றுலாத்தலங்களாக உருவாக்கிட வேண்டும். மக்களும் இவர்களுக்கு நெருக்குதல[ தரவேண்டும்.

1. கன்னியாகுமரியிலிருந்து – திருவனந்த்புரம் வரை கடல் மார்க்கம் படகு போபாக்குவரத்து விடுதல் 2. குமபோ மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களை பார்க்கும் போருட்டு சுற்றுலா தினசரி பேக்கேஜ் அமைத்தல் (இந்த வசதி கோவாவில் தற்போபாது உள்ளது)

தொழில் பூங்காக்கள் அமைத்திட வேண்டும்:

தொழில் துறையில் குமரிமாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது. அரசால் இரண்டு தொழில் பேட்டைகள் தொடங்கப்படிருந்தும் அதில் காணுகின்ற தொழிறகூடங்கள தொழில்கள் அல்லாத துறைகளுக்கு ஒதுககியிருப்பதால தற்போது தொழில் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் முனைவோருக்கு அவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே தொழில் பேட்டைகளில் தொழில் அல்லாத காhpயங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பேட்டைகளிலிருந்து அவைகளை காலி செய்துவிட்டு தொழில் முனைவோருக்கு அவைகளை அளிக்கவேண்டும்.

அ. புதிய முந்திhpப்பருப்பு ஆலைகள் தொடங்குவதை தடை செய்யவேண்டும்:

சுற்றுச்Nழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான தொழில்கள் இம்மாவட்டத்தில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கனவே இங்கே செயல்பட்டு வருகின்ற பலநு}று முந்திரிப்பருப்புத் தொழிற்சாலைகளால் காற்று மண்டலம் மாசுப்பட்டுவிட்டது. இதிலிருந்து வரும் புகையில் கலந்து காற்று மண்டலத்தில் பரவுகின்ற முந்தரி எண்ணெய் துகல்களால் மரங்களும் மனிதர்களும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புகையால் மனிதர்களின் நுரையீரல், லிவர் மற்றும் இருதயம் பாதிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நோய்யால் பாதிக்கப்பட்ட பலர் இன்று மருத்துவமனைகளில் சிகிட்சை பெற்று வருகிறhர்கள். இந்த எண்ணெய் படலத்தால் தாவரங்களின் வளர்ச்சியிலும் காய்ப்புத்தறின்களிலும் பாதிப்புகள் உருவாக்கியுள்ளன. ஏனவே இவைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

ஆ. ரப்பர்பூங்கா தொடங்குவதை தவிர்க்கவேண்டும்:

செண்பகராமன்புதூரில் ஒரு “ரப்பர் பூங்கா” தொடங்குவதாக பல காலங்கள் பேசப்படுகின்றன. பூங்கா நிறுவப்பட்டால் பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களால் இயற்கைச் Nழலை மாசுப்படவைக்கின்ற கந்தகம் (ளரடphரச) கரித்தூள் (ஊயசbடிn னுரளவ) அமிலங்கள் (Aஉனைள) மற்றும் ரசாயணங்கள் (ஊhநஅiஉயடள) உபயோகப்படுவதால் அவைகள் அனைத்தும் காற்று மண்டலத்தையும் நீர் ஆதாரங்களையும் நிலத்தின் தன்மைகளையும் மாசுபடுத்தும். எனவே இந்த ரபபர் பூங்காவிற்கு பதிலாக ஒரு ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இம் மாவட்டக்காரர்களுக்கு இங்கேயே வேலை கிடைப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே அரசு இந்த ரப்பர் பூங்காவிற்குப் பதிலாக அதே வளாகத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இ. உணவு பதனிடும் தொழில்:

இம்மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பல்வேறு காய்கனிகளை மூலப்பொருளாக பயன்படுத்தி உணவு பதனிடும் தொழில்கள் உருவாக்குவதற்கு தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்.

ஆகையால் கீழ்குறிக்கின்ற தொழில்களை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.

1. காற்று மண்டலத்தை மாசு படுத்துகின்ற விதத்தில் பழைய தொழில்நுட்பத்தில் புதிதாக தொடங்கும் முந்திhpப் பருப்பு ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2. சென்பகராமன்புதூரில் பல காலங்களான தொடங்ப்படாமலிருக்கின்ற ரப்பர் பூங்காவை ரத்து செய்துவிட்டு அவ்விடத்தில் ஐ.கூ. தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். 3. காய்கனிகளை பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும். 4. தேங்காய் பவுடர் தயாhpக்கும் தொழில் மேலும் தொடங்கலாம்.

விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க வேண்டும்:

குமரி மாவட்டம் முழுக்கவும் விவசாயத்தைச்சார்ந்த ஒரு மாவட்டமாகும். இங்கே பயிரிடப்படாத பயிர்களோ, காய்கனிகளோ செடி கொடிகளோ இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் நவ{னதொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை. பழைய முறைகளையும், புதிய ரசாயன உரங்களையும் பயன்படுத்தித்தான் விவசாயம் நடக்கிறது. எனவே இம்மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சிக்காக ஒரு விவசாயக் கல்லூரி தொடங்க வேண்டும். விவசாயத்தில் முனைவர் படிப்பை முன்னிறுத்தி, ரப்பர் ஆராய்ச்சி, தோட்டக்கலை ஆராய்ச்சி, வனவள ஆராய்ச்சி, போன்ற ஆரய்ச்சி பிரிவுகளைக் கொண்ட ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். மீன் வள கல்வி ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசரி செய்து தரவேண்டும்.
குமரி மாவட்டத்தில் திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர் தெற்கே பார்த்தால் கடலில் தண்ணீர், மேற்கே பார்த்தால் அங்கேயும் தண்ணீர். கிழக்கே நாஞ்சில் நாடு. திரும்புகிற இடமெல்லாம் தண்ணீர், வடக்கே செல்ல வேண்டாம். தண்ணீரைத் தேக்கி வைக்கின்ற நான்கு அணைகள். அங்கேயும் தண்ணீர். ஆனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை. ரசாயனத் தண்ணீர்தான் குடிக்க வேண்டும். பாதுகாப்பில்லாத தண்ணீர் தான் குடிப்பதற்கு நமக்கு அது தருகிறது. அனைத்திலும் யூரியா கரைத்த தண்ணீர். கால்வாயில் யூரிய கலந்த தண்ணீர் குளத்தில் யூரிய தண்ணீர். குழாயில் யூரியா கலந்த தண்ணீர். எப்படி இவைகளில் எல்லாம் யூரியா கலக்கிறது?.

ரப்பர் தோட்டங்களுக்க போடப்படுகின்ற யூரியா கலவை (ரப்பர் உரம்) மழைத் தண்ண{ரில் கலந்து கால்வாய், குளம், குட்டைகள் மற்றும் ஆற்று நீரில் கலந்து விடுகிறது. இந்த தண்ணீரையே நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் குழாய் மூலம் மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். அப்படி விநியோகிக்கின்ற தண்ணீரைச் சுத்தம் செய்து ய+ரியா போன்ற மற்ற ரசாயனங்களை பிரித்தெடுத்து பாதுகாக்கப்பட்ட தண்ணீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு உடல் கோளாறுகள் உருவாகி மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு திருவிழாக்கூட்டமாக கூடிக்கிடக்கிறார்கள்.

எனவே, நகராட்சிகளில், பேரூராட்சிகளில் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் வினியோக அமைப்புகளை திருத்தி அமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகித்திட வேண்டும். நாகர்கோவில் நகராட்சியைப் பொறுத்த மட்டில் அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற சுத்திகரிப்பு நிலையம் உதவியுடன் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் நகராட்சிக்கு தண்ணீர் தருகின்ற முக்கடல் அணை முற்றிலும் தூர்ந்த நிலையில் இருப்பதால் அதன் நீர் கொள்ளளவு கணிசமான அளவிற்கு குறைந்து விட்டது. தவிரவும் இந்த அணை 1981-ம் ஆண்டு குமரித்தந்தை மார்ஷல் எ. நேசமணி அவர்கள் நாகர்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் வேளையில் திவான் சர். சி. பி. ராமசுவாமி ஐயரிடம் முறையிட்டு பெற்றதாகும். அன்று காலப்பட்ட மக்கள் குடியிருப்புக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் உருவாக்கப்பட்டதாகும். இன்று மக்கள் பெருக்கமும் குடியிருப்பு பெருக்கமும் பல மடங்கு பெருகிவிட்டாலும், தண்ணீர் வழங்குகின்ற அமைப்பு அவ்வாறே தான் உள்ளது. அந்த அணையை விரிவுப்படுத்தவோ, ஆழப்படுத்தவோ, தூர்வாரவோ அல்லது நவீனப்படுத்தவோ செய்யாத நிலையில் நகரின் தண்ணீர் தேவையை சுத்தமில்லாத தண்ணீர் வினியோகத்தில் சமாளிக்கின்றனர்.

இந்த நகராட்சியின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் உலக்கை அருவி நீர் சேமிப்புத்திட்டம் ஒன்று வரையப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நஉழழெஅiஉயடடல ழெவ கநயளiடிடந என்றுக் கூறிக்கைவிடப்பட்டது.

அதனால் நகர மக்கள் கோடை காலங்களில் தண்ணீருக்காக பேயாய் அலைகின்ற அவல நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த உலக்கை அருவித் திட்டத்துக்கு மாற்றுத் திட்டம் தீட்டப்படவேண்டும் தவிரவும் முக்கடல் அணையை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, தூர்வாரி சுத்தப்படுத்தி அதன் கொள்ளளவை மும்மடங்காக்கி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை அரசு உடனே களைந்திடவேண்டும். இதே போன்று பத்மனாபபுரம் நகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் குழித்துறை நகராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நீர்த்திட்டங்கள் உருவாக்கிட வேண்டும். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் கூட்டு குடிநீர்த்திட்டங்கள் அறிமுகப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க வேண்டும்.

ரெயில்வே துறை வளர்ச்சி:

குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன. திருவனந்தபுரம் கோட்டத்தில் 650கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ தொலைவு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் இல்லை. இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் மலையாளி ஆதிக்கத்திலிருந்து விடுபட வில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம். இது மலையாளி ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்துவிட்டதை பொறுக்க முடியாமல் கடும் வைராக்கியத்துடன் பல்வேறு வழிகளில் குமரி மாவட்ட மக்களை பழிவாங்குகின்றனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள்.

இரண்டாவதாக இங்கிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் குமரி மக்களின் பயன்பாட்டை நிராகரித்து, மலையாளிகளின் வசதியை மையமாக வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் மற்றும் செல்லும் திசைகள் குமரிமக்களுக்குப் பாதகமாகவும் கேரளா (மலையாளி) மக்களுக்கு சாதகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் குமரி மாவட்டத்துக்குள் வந்து ரயில் நிலையங்களில் ரயில்கள் தங்கி கேரளத்தவரின் வசதிக்காக ஓடுகின்றன. காரணம் திருவனந்த புரத்தில் நிறுத்தி வைக்க இடம் இல்லை.

இந்நிலையை சீர் செய்ய ரயில் பயணிகள் இணைந்து சங்கம் அமைத்தார்கள். சங்கங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. குமரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பிளாட்பாம் மாற்றத்துக்கு எடுத்த முயற்சி கூட தோல்வியில் முடிந்தது. குமரி மாவட்டத்தைப் பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கால கட்டம் வந்தது போல குமரி மாவட்ட ரயில் நிர்வாகத்தை கேரளாவிலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. பயணிகள் சங்கங்களும், எம்.எல்.எ., எம்.பி.யும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து போராடாமல் எதுவும் நடக்கப் போவதில்லை. போராடுவார்களா?

கீழ்குறிபிடபட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே ரயில்வே துறையில் குமரி மாவட்டம் தன்னிறைவு பெறும். கூடுதல் ரயில்கள்.

புதிய ரயில்கள்:

1. நாகர்கோவிலிருந்து – சென்னைக்கு முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய தினசரி ரயில் 2. கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் 3. கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், காரைக்குடி, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் ரயில்கள் நீட்டிப்பு 4. திருவனந்தபுரம் - மங்களுர் 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்குதல் 5. நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு இரயிலை ஒரு மார்க்கத்தை வாஸ்கோடகாமா(கோவா) வரை நீட்டிப்பு செய்தும் மறுமார்க்கத்தை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்தும் கன்னியாகுமரி - வாஸ்கோடகாமா(கோவா) எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க கோரிக்கை 6. திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு 7. திருநெல்வேலி – தாதர் வாரத்துக்கு மூன்றுநாள் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு சேவைகளை அதிகரித்து இயக்குதல்: 8. கன்னியாகுமரி – புதடில்லி வாரத்துக்கு இரண்டுநாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 9. கன்னியாகுமரி – புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 10. கன்னியாகுமரி – ஹவுரா வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் 11. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் கேரள வழியாக சுற்று பாதையில் செல்லும் ரயில்களுக்கு பதிலாக குறைந்த தூரம் கொண்ட தமிழக நகரங்கள் வழியாக ரயில்கள் இயக்க கோரிக்கை 12. சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் வாராந்திர சூப்பர்பாஸ்டு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு 13. சென்னை எழும்பூர் - திருபுகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு 14. சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் வாராந்திர சூப்பர்பாஸ்டு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு 15. திருநெல்வேலி – ஜம்முதாவி வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலை நாகர்கோவில் வழியாக ஒரு நாள் கன்னியாகுமரிக்கும் ஒரு நாள் திருவனந்தபுரத்துக்கும் நீட்டித்து இயக்க வேண்டும். 16. கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்:-

கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் தினசரி ரயில் கேரளா வழியாக சுற்றி பயணநேரம் 47 மணி நேரம் எடுத்து கொள்கிறது. இதே மும்பைக்கு மங்களுர் வழியாக இயக்கப்படும நாகர்கோவிலிருந்து செல்லும் ஹாப்பா ரயிலில் 28மணி 15 நிமிடங்களில் சென்று விடலாம். ஆகவே இந்த கன்னியாகுமரி – மும்பை ரயிலின் வழித்தடத்தை மாற்றி கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களுர், மட்கான் வழியாக இயக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கிய வழி தடமாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மி பகுதி அமைந்துள்ளது. இந்த வழி தடத்தில் தற்போது சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு 56 கி.மி மற்றும் மதுரை – திண்டுக்கல் 66 கி.மி வழி தட பகுதிகள் மட்டுமே இருவழித் தடமாக மாற்றபட்டுள்ளது. மீதமுள்ள 620 கி.மீ பகுதிகள் அனைத்தும் ஒரு வழி பாதையாகவே உள்ளன. ஆகவே உடனடியாக கன்னியாகுமரி – சென்னை 742 கி.மீ வழி தடம் இருவழிப்பாதையும் மின்சார மயமாக ஆக்கபடவேண்டும்.

நாகர்கோவில் நகரில் மெட்ரோ ரயில் திட்டம்: நாகர்கோவில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நாகர்கோவில் நகரில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். பிற வளர்ச்சி திட்டங்கள்:

1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ஷல் நேசமணி பெயரில் புதிய பல்கலைகழகம் அமைக்க வேண்டும். 2) குமரி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட வகையான வாழைபழ வகைகள் பயிரிடபட்டு வருகிறது. இந்த வாழை இனங்கள் அழியாமல் பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கும், நோய்கள் தாக்காமல் இருக்கவும், பொருட்டு குமரி மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். 3) குமரி மாவட்டம் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஒரு மாவட்டம் ஆகும். சிறுபான்மையினர் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளில் குறைவாக காணபடுகின்றனர். இதை அதிகரிக்கும் பொருட்டு சிறுபான்மையினருக்கான மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் IAS, IPS பயிற்சி மையம் அமைக்கபடவேண்டும். 4) குமரி மாவட்டத்தில் அதினமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக உள்ளனா. இவர்களின் வசதிக்காக பாஸ்போட் விரிவாக்க மையம் மற்றும் சென்னையில் உள்ள வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தமிழக அரசின் நிறுவனத்தின் பிரிவை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும். 5) குமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தேன் அதிகமான உற்பத்தி செய்யபடுகிறது. தேன் உற்பத்தி செய்யும் தொழிலை உயாத்தவும் பொருட்டு மார்த்தாண்டத்தில் தேன் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் 6) இங்கு தேங்காய் அதிகம் பயிரிடப்படுவதால் தேங்காய் ஆராய்ச்சி மையம் அமைத்தல் 7) மகேந்திரகிரி ISRO விரிவாக்கம் செய்து தனி பிரிவாக இயங்கவைத்தல் மற்றும் இதற்காக ராக்கேட் சம்பத்தமான படிப்புகள் கொண்ட NIT கல்வி நிறுவனம் மகேந்திரகிரியில் அமைத்தல், 8) IRE விரிவாக்கம் செய்து அதைசார்ந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், 9) லக்னோவில் உள்ளதை போன்ற மத்திய மருத்துவ முலிகை கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம் மருத்துவாள் மலை பகுதியில் அமைத்தல், 10) குமரியில் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு சாய்சென்டர் அமைத்தல் 11) சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 12) குளச்சலில் மீன்வளகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 13) கீரிபாறையில் வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 14) கன்னியாகுமரியில் உள்ள பழத்தோட்டத்தில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 15) தக்கலை அருகில் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 16) பேச்சிபாறையில் தோட்டகலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 17) திருப்பதிசாரத்தில் உள்ள விவசாயவிரிவாக்க மையத்தை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாற்றம் செய்தல் 18) ஆகமதாபாத்தில் உள்ள NID போன்ற கல்லூரி அமைத்தல் 19) குமரியில் உள்ள மிகவம் சுவை கூடிய காய்கறிகள் மற்றும் விதைகளை பாதுகாக்கும் பொருட்டு காய்கறி ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 20) ரஜாக்கமங்கலத்தில் உள்ள பல்கலைகழக பயோடெக்னாளஜி பிரிவை தனி நானோ டெக்னாளஜிக்கு என தனி பல்கலைகழகமாக மாற்றுதல். 21) ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை மின்உற்பத்தி அதிகமாக இருக்கதால் அதை சார்ந்த தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆரல்வாய்மொழி பகுதியில் அமைத்தல், 22) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆழப்படுத்துதல் 23) சென்னையில் உள்ள கன்னிமரா நுலகத்தை போன்ற மிக பெரிய அளவில் ஒரு நூலகம் மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் படியாக தக்கலை பகுதியில் அமைக்க வேண்டும் 24) மேற்கல்விக்கு என ஓரு அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (PG College and Research Center) 25) கோட்டையத்தில் உள்ள ரப்பர் ஆராய்ச்சி நிலையத்தின் பிரிவு அலுவலகம் களியல் பகுதியில் அமைத்தல் 26) மார்த்தாண்டம் பகுதியல் மத்திய அரசின் கேந்திர வித்யாலையா பள்ளிகூடம் அமைக்க வேண்டும். 27) தில்லியில் உள்ள எய்ம்ஸ் அரசு மருத்துவனை போன்ற மருத்துவமனை நாகர்கோவிலில் அமைக்க வேண்டும். 28) நாகர்கோவில் டிப்போவில் பேருந்து பாடி கட்டும் தொழிற்சாலை மீண்டும் அமைக்க வேண்டும். 29) கன்னியாகுமரியில் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் அமைக்க வேண்டும் (REGIONAL SCIENCE CENTRE-Planetarium)

இந்த பதிவை உங்களின் சமூக வலைபக்கங்களில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

C.Kumaradhas, President, Kanyakumari District Freedom Fighters Main Association, Star Illam, Kodumutty Tower Junction, Bethelpuram Post, Kanyakumari District-629803. Cell: 9965370433

சனி, 16 ஜூன், 2012

பாராளுமன்றத்தில் தூங்கும் பிரணாப் முகர்ஜி !



பாராளுமன்றத்தில் தூங்கும் பிரணாப் முகர்ஜி!
சோனியா காந்தியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி தூங்குவதை பாருங்கள். அய்யா அப்துல் கலாமிற்கு ஆதரவாக ஒவ்வரு தமிழரும் தங்கள் தளங்களில் இதை மறு பிரசுரம் செய்யுங்கள். 

வெள்ளி, 20 மே, 2011

கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!

கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!

கனிமொழியின் கைது பற்றிய தினமலர் செய்தியில், வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!




Suresh - chennai,இந்தியா
கனி, நீ நாட்டுக்கு ஒரு சனி. ஜெயிலில் கொடுபாங்க வெள்ள துணி. இன்றோடு முடிந்தது நாட்டோட பிணி. தொடரட்டும் நீதிமன்றத்தின் பணி...

prabhu - coimbatore,இந்தியா
எனக்கு இப்போது வந்த s m s " ஒரு வருஷம் முன்னாடி செம்மொழியான தமிழ் மொழியாம் இப்போது - கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்" இது எப்படி இருக்கு?. பிரபு கோவை


sameer - hyderabad,இந்தியா
கனிக்கு களி ரெடி


T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
ஜாமீன் எல்லாம் கிடைக்காது, வேணுமின்னா வாள மீன் ,கெண்டை மீன் ,கெளுத்தி மீன், வஞ்சிரம் மீன் மார்க்கெட்டில் கிடைக்கும் வறுத்து சாப்பிட !!!


veeratamilan - chennai,இந்தியா
இந்த கள்ளியை விட கூடாது, எல்லா அரசியல் வாதிகளும் செய்தது போல சில கோடிகளுக்கே ஜெயலலிதாவை என்ன பாடு படுத்தினார்கள், அதை விட 100000 மடங்கு பெரிய ஊழல் இது, வேறெந்த நாட்டிலும் கூட நடந்திராக அளவு மிகபெரிய ஊழல். இவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நீதி காப்பாற்ற பட வேண்டும்.


Muthukumar - coimbatore,இந்தியா

அப்பாட...........இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கு...........கூடவே கருணாநிதியையும் தூக்கி ஜெயில்ல போட்டால் நல்லா இருக்கும்
Rate it: 123 3Share this comment



NKR rekha - karur,இந்தியா
வெள்ளிகிழமை 13 ஆம் தேதி வெள்ளிகிழமை 20 ஆம் தேதி இனி திமுக வின் கரி நாள் ?


Maravan Zeus - madurai,இந்தியா
கைதி ஆனார் அக்கா .....

ramesh - villupuram,இந்தியா
குட் ஃப்ரைடே...


Bala Kumar - yibal,ஓமன்
இது சும்மா டிரைலர் தாம்மா மொத்த படத்தையும் இனிமேல பாரு..............


laxmi - chennai,இந்தியா
மாமி அங்கே காபி போடுவார்களோ அல்லது கருவாடு சமைபார்களோ? உலகத்தில் இரண்டாவது பெரிய ஊழல் இது. மொத்த குடும்பத்தையும் மற்ற பயனாளிகளையும் உள்ளே வைக்கா விட்டால் நம் நாட்டிற்கே பெரிய அவமானம்


Raj - rayong,தாய்லாந்து
சட்டம் தன் கடமையை செய்தது


T.R.Radhakrishnan - mumbai ,இந்தியா
நம்ம "சொக்க தங்கம்", "உள்துறை" எப்ப உள்ளே போகப் போறாங்க?


Rajaram Ramkumar - chennai,இந்தியா
இருபது சதவிதம் பங்கு உள்ளவர்கள் சிறையில் ? அப்போ அறுபது சதவிகிதம் வைதுள்ளோரை எப்போ தள்ளுவது சிறையில் ?


K..ANBARASAN - doha,கத்தார்
இனி அவருடைய க‌லைஞர் தொலைகாட்சி மூலமாகவே அவருடைய ஜெயில் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் க அன்பரசன் I

s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
பாவம் கருணாநிதி, அவருடன் அழுவதற்கு கூட ஆளில்லை.

villupuram jeevithan - villupuram,இந்தியா
கனிக்கு ஜெயில் நம்பர் ஆறு; சரத்குமாருக்கு ஜெயில் நம்பர் மூன்று. கனிக்கு ஒரு டிவி உண்டாம்; அதில் கலைஞர் டிவி தெரியுமா?



krishnakumar - tirrupur,இந்தியா
சூப்பர்..,அப்பு இத .,இததான் நாங்க ரொம்ப நாளா எதிர் பார்தோம் .,

jeyakanth - brombly,யுனைடெட் கிங்டம்
கலைஞர் வாயில் வந்த கனிமொழி தமிழ்நாட்டு செல்வம் முழுங்கிய மு(மூ)க்கோடி நீ இப்போ தெருக்கோடி ,எல்லாம் நீ கொண்ட செருக்கோடி?

Shankar - bangalore,இந்தியா
மிக சரியான நடவடிக்கை. 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரும் "குற்ற பத்திரிகையில்" சேர்க்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

Kadalangudi Subashchandrabose Ganesh - tirupur,இந்தியா
தயாளு அம்மா ,,,,,,,,, சீக்கிரம் ரெடியா இருங்க

SHELINGTON SHELINGTON - bedok,சிங்கப்பூர்
மஞ்ச துண்டுக்கு மற்றும் ஒரு சறுக்கல். இது மாபெரும் சறுக்கல். ஏகடியம் பேசும் மஞ்சதுன்டேய் நீ இனி வாய் திறக்க கூடாது. ஊழலின் மொத்த உருவம் இந்த மஞ்சதுன்டுதான்.

Chandru Vihasan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கனிமொழி க்கு ஓய்வு கொடுத்துள்ளது சட்டம், கருணாநதி க்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள் மக்கள்

M.Vijayasekaran - udumalpet,இந்தியா
மாங்குயில் பாடும் பூஞ்சோலை என்னை மாட்டிவைதிட்ட சிறைச்சாலை .......... படியம்மா உங்கப்பா எழுதிய கவிதையை ......... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....... ராஜ்யசபாவில் எடுத்த உறுதிமொழி மீண்டும் மீண்டும் படித்துப்பாரம்மா ......கனிமொழி .... இந்தியாவின் அழுகியமொழி .....

நன்றி: தினமலர்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அரபு நாடுகளில் மக்களாட்சி !

அரபு நாடுகளில் மக்களாட்சி!

அடக்கு முறை ஆட்சியாளர்களிடமிருந்து அரபு மக்களுக்கு சீக்கிரமே விடுதலை கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது, இப்போது நடந்து வரும் போராட்டங்களின் வழியே தெரிகிறது. இப்போது துனிசியா, எகிப்து மக்களின் வெற்றியை பார்த்த எமன், அல்ஜீரியா, ஈரான், பஹ்ரைன் நாட்டு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்! இப்படி தொடர்ந்திடும் போராட்டம் இன்னும் மீதியுள்ள மன்னராட்சி என அறியப்படும் சர்வாதிகள் ஆளுகின்ற நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு குடியரசுகள் போன்றவற்றிலும் தொடர்ந்திட வேண்டும்.

நேற்று ஈரான் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.

உலகம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும், தன் குடும்ப சொத்துபோல ஆண்டுவரும் இந்த சர்வாதிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களே அவர்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த அரபு மன்னர்களின் குடும்பங்கள் தான் முதலீடு செய்துள்ளனர். பெட்ரூளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இவர்கள் கொள்ளையடித்து தங்களின் முதலீட்டிற்கு பயன் படுத்துகிறார்கள். இவ்வளவு எண்ணெய் வளம் உள்ள சவுதி அரேபியாவில் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

நேற்று அல்ஜீரியா நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.

முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் சவுதி அரேபியாவில், சட்டத்திற்கு எதிரான அனைத்து பொருட்களும், போதை பொருட்கள் உள்பட விமான நிலையத்தின் "ராயல் டெர்மினல்" என சொல்லப்படும், ராஜ குடும்பத்திற்கான பிரத்யோக நுழைவு வாயிலின் வழியே கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்த சட்டவிரோத செயல்களின் தலைமையாக இளவரசர்களே செயல் படுகின்றனர்! தாய்லாந்து லாட்டரி இங்கு மிகவும் பிரபலமானது. இதை நடத்துவது ஒரு இளவரசர்தான்.

நேற்று பஹ்ரைன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.

செயற்கைகோள் தொலைக்காட்சி உபகரணங்கள் இங்கு சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருளாம். ஆனால் உலகத்திலேயே அதிக அளவில் செயற்கைக்கோள் நிகழ்சிகளும், அதற்கான உபகரணங்களும் சவுதியில் மிக சாதரணமாக கிடைக்கும். சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக அளவில் நீலப்படம் பார்பவர்கள், இந்த சவுதி அராபிய மக்களாகத்தான் இருக்கும். இது ஒவ்வருவரின் வீட்டு கூரையை பார்த்தால் தெரியும். நான்கு ஐந்து டிஷ் ஆண்டனா பொருத்தியிருப்பார்கள். இந்த உபகரணங்கள் சட்ட விரோதமெனில் எப்படி நாட்டிற்குள் நுழைகிறது என்பது அந்த இளவரசர்களுக்கே வெளிச்சம்!

நேற்று எமன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.

இப்படி நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கும் இந்த சர்வாதிகளிடமிருந்து விடுபட்டு மக்களாட்சி மலரவேண்டும். அதற்கு பிற நாடுகளும் உதவிட வேண்டும்.
இப்போது பக்கத்துக்கு நாடுகளின் புரட்சியை கண்டு நிஜத்தில் எல்லா அரபு மன்னர்களும் பீதியில்தான் உள்ளார்கள்! தங்களின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதனை நினைத்து.

திங்கள், 20 செப்டம்பர், 2010

சலுகை திருடர்கள்!

சலுகை திருடர்கள்!

இங்கிலாந்தில் இது ஒரு பெரிய பிரச்சனை. அரசின் சலுகைகளை தவறான தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்வது. இப்படி செய்வது வெள்ளைக்காரர்கள் மட்டுமல்ல! இங்கு வந்து குடியேறியுள்ள வெளிநாட்டவரும்தான். சென்ற வருடம் மட்டும் 900 மில்லியன் பவுண்டுகள் இப்படி சலுகை திருடர்களால் அரசிற்கு இழப்பாகியுள்ளது.(ஒரு பவுண்டு சுமார் எழுபது இந்திய ரூபாய்கள்) இப்படி ஏமாற்றுபவர்களை ஒரு புறம் பிடித்துக்கொண்டிருந்த்தாலும் மறுபுறம் இது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.

சமீபத்தில் இப்படி பிடிபட்ட ஒருவர் கால்பந்தாட்டத்தின் நடுவராக செயல் பட்டுக்கொண்டிருந்தார். இவர் இந்த விளையாட்டின் நடுவராக ஓடி செயல் படுவதை வீடியோ மூலம் எடுத்திருந்தனர். காரணம் இவர், கால் ஊனம் நடக்க முடியாதென, அரசின் சலுகையை பெற்று வந்தவர். இன்னும் பலர், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு அந்த சூடோடு குழைந்தையும் பெற்றுக்கொண்டு, அதே வேகத்தில் விவாக ரத்தும் செய்து கொள்வர். பின்னர் வாழ வழியில்லை, இருக்க வீடில்லை, என சொல்லி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டையும், பிற சலுகைகளையும் பெற்றுக்கொள்வர். இதன் பின்னர் இவர்கள் இணைந்து விட்டால், அதை அரசிற்கு சொல்ல மாட்டார்கள்! சில வேளைகளில் புதிய ஆணுடன் சேர்ந்து வாழ்வார்கள். இதை நிறையபேர் அரசிடம் சொல்லாமலே சலுகை திருடர்களாகவே வாழ்ந்து வருவர்.

சென்ற வருடம் மட்டும் இந்த சலுகை திருடர்களில் 56,493 பேர் பிடிபட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 232 பேர். இப்படி சலுகையை திருடுகிறவர்களை பிடிக்க நிறைய வழி முறைகளை கையாள்கிறது அரசு. பிடிபடுபவர்களிடம் கொடுத்த பணத்தை சரியாக வசூல் செய்துவிடுவர். கூடவே தண்டனையும்.

இந்தியாவிலும் இப்படி அரசின் சலுகையை தவறான தகவல்களை கொடுத்து பெற்று கொள்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். அவர்களை யாரும் சலுகை திருடர்கள் என சொல்வதாக தெரியவில்லை. என் பள்ளி தோழன் ஒருவன் அரசின்படி தாழ்த்தப்பட்டவன். அவன் ஆசிரியராக வேலையில் சேரும்போதுதான் பிரச்சனை வந்தது. காரணம் அவன் பெயர் கிறிஸ்தவப் பெயர். எனவே அந்த பணி அவனுக்கு மறுக்கப்பட்டது. இந்து என்று சொல்லி வேலையை பெற்றுக்கொண்டான். இன்னுமொரு பள்ளி தோழன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னுடன் தேவாலயம் வந்தவன். இந்து என சொல்லித்தான் அரசின் பணியை அதிகாரி உமா சங்கர் போல பெற்றுக்கொண்டான்.

இது நமக்கு தவறு போல தெரிவதில்லை. இப்படி நம் எல்லோருக்குமே யாராவது தெரிந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்படி இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். எவ்வளவு நம் நாட்டிற்கு இழப்பு. எனவே சலுகையை தவறாக பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களையும், இங்கிலாந்தில் அழைப்பதைப் போல "சலுகை திருடர்கள்" என அழைக்கலாம்.

சனி, 26 டிசம்பர், 2009

போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!

போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!

இந்த பதிவின் தலைப்பை அலோபதி மருத்துவருக்கு நாட்டு மருந்து என்றுதான் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். காரணம் இங்கே போலீசின் அடிக்கு நாட்டு மருந்து குடித்தவர் அலோபதி மருத்துவராயிற்றே! ஏன் என்று அறிய மேற்கொண்டு படியுங்கள்!

இதை இப்போது எழுத காரணம், சமீபத்திலே மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி பணியாளர்களை உயிரோடு கொன்றவர்களை சாட்சிகள் சரியில்லை என விடுதலை செய்த கேவலமான நீதிபதியை போல, முன்பு குமரி மாவட்டத்திலும் ஒரு கேவலமான நீதிபதி தீர்ப்பளித்தார். அதை தான் இப்போது படிக்க போகிறீர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸிற்கு ஒரு நப்பாசை. தன்னை அவசரநிலை பிரகடனத்தின் போது உள்ளே தள்ளிய அன்னை இந்திரா காந்தியை, தான் அமைச்சராகியதும் அதே சிறை கம்பிகளுக்கு பின்தள்ளி சந்தோசபட்டுக்கொண்டார். இதை பார்த்து கொதித்து போன இந்திரா காந்தியின் தொண்டர்கள், இந்தியா முழுவதும் கலவரத்தில் இறங்கினர். குமரி மாவட்டத்திலும் இதன் எதிரொலி இருந்தது.

தக்கலையின் பக்கத்திலுள்ள வெள்ளியோடு என்னும் இடத்தில், கடைசி இரவு பேருந்தை பயணிகளோடு வைத்து எரித்து விட்டனர். போலீஸ் மிகவும் சாதுர்த்தியமாக செயல்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்தது. பேருந்தை தீ கொடுத்தவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு போயிருந்தனர். பேருந்தின் அருகிலேயே வாடகை சைக்கிள் கிடந்ததை போலீஸ் கண்டெடுத்தது. விசாரணையில் இந்திரா காங்கிரஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஒருவர் அகப்பட்டார். எப்படியும் இவர் குருட்டு நீதிபதியால் வெளியில்விடப்படுவார் என்பது தெரிந்த போலீசார் இந்த டாக்டரை நைய புடைத்து விட்டார்கள். எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே நாகர்கோயில் நீதி மன்றத்தில் சாட்சிகள் சரியில்லை என இவர் அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற குருட்டு நீதிபதியால் விடுவிக்கபட்டார்! என்ன இருந்தாலும்,போலீஸின் அடி சரியாக கிடைத்ததால் இவர் கருங்கல்லிற்கு பக்கத்திலுள்ள செல்லம்கோணம் என்னும் ஊரிலுள்ள பிரபல நாட்டு வைத்தியரிடம்(என் நண்பனின் தந்தை)சென்று மருந்து குடித்தார். அலோபதி மருத்துவரானாலும் அடிக்கு நாட்டு மருந்துதான் சிறந்த்தது என தெரிந்து வைத்திருக்கிறார். பரவாயில்லை.

மதுரையிலும் போலீஸ் இதை மாதிரி அட்டாக் பாண்டி போன்றவர்களின் இடுப்பை ஒடித்திருந்தால், மதுரையின் இளவரசர் அல்ல! சென்னையின் ராஜா!! சொன்னால்கூட மேற்கொண்டு தப்பு செய்ய ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிப்பான்.
அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற பெரும்பாலான நீதிபதிகளுக்கு கண் கெட்டுப்போனதால் சாட்சிகள் சரியாக தெரிவதில்லை. குறைந்த பட்சம் நேர்மையான போலீஸ் களால் நூறு சதவிகிதம் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டவர்கள் இப்படி தண்டிக்கபட்டால்கூட தப்பில்லைதான். நம் பழமொழியும் அதைதானே கூறுகிறது.
அடி செய்யும் உதவி அண்ணன் தம்பி செய்யமாட்டான்

சனி, 3 அக்டோபர், 2009

அலைபேசி! கைபேசி! செல்பேசி!

அலைபேசி, கைபேசி, செல்பேசி!



இந்த மொபைல் போன் ஐ தமிழர்களாகிய நாம், அலைபேசி, கைபேசி, செல்பேசி, மொபைல் போன், செல் போன், என ஆளாளுக்கு இப்படி தமிழில் சொல்லி வருகிறோம். உலகில் வேறு எந்த மொழிக்காரனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்காது. புதியதாக ஏதாவது ஒரு பொருள் அறிமுகமாகும் போது உடனே சம்மந்தபட்ட துறை அதற்கான வார்த்தையை அவர்களின் மொழியில் வெளியிடும். எல்லோரும் அதையே பேசி பழக்கத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் தமிழனுக்குதான் பெரிய பிரச்சினை. இதற்கு யாரு பொறுப்பு என தெரியவில்லை!

இந்த மொபைல் போன் அறிமுகமாகிய போது அரபு நாடுகளில் உடனே அதற்கு ஜவால் என பெயரிட்டு அழைக்க தொடங்கினர். ஒரு அரபியும் வேறு பெயர் பயன் படுத்தியதாக தெரியவில்லை. இந்திய தமிழர்கள் இப்போது தமிழ் பேசுவது கிடையாது. நிறைய ஆங்கில சொற்களை பயன்படுத்திதான் பேசுகிறார்கள். எனவே அவர்களுக்கு இதை பற்றிய கவலை இருக்காது. பிற மொழி கலக்காமல் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால், ஒரு இந்திய தமிழனும் அதில் வெற்றி பெறமாட்டான், என்னும் நிலைமையாகிவிட்டது. ஆனால் இலங்கை தமிழர்கள் இந்த விசயத்தில் நம்மை போல் அல்ல! அவர்கள் தான் மொபைல் போன் ஐ கைபேசி என முதலில் அழைக்ககேட்டேன். ஆனால் இன்று அந்த வார்த்தை மட்டும் நடைமுறையில் இல்லை.




இப்படி ஆளாளுக்கு குழப்புவதற்கு பதில், பேசாமல் அந்த பொருள் எந்த மூல மொழியில் வருகிறதோ, அதே சொல்லை நாமும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக ஆங்கிலத்தில் நிறைய பிற மொழி சொற்கள் இருப்பதை சொல்லலாம்.

நம் பல்கலைகழகங்களாவது இந்த பொறுப்பை எடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு திரைப்பட துறையை சேர்ந்தவர்களையும், அரசியல்வாதிகளையும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. கணிணி சம்பந்தமான வார்த்தைகளைக்கூட ஆளாளுக்கு தெரிந்த மாதிரி எழுதுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் யார் தீர்வு காண்பதோ?

அது சரி, அலைபேசி! கைபேசி! செல்பேசி! மொபைல் போன்! செல் போன்! இதில் எது சரி?

புதன், 30 செப்டம்பர், 2009

ஆச்சி, உங்களுக்கு சில டிப்ஸ்!

ஆச்சி, உங்களுக்கு சில டிப்ஸ்!

என்னமோ நீங்கள் திரைப்பட துறையைத்தான் கலக்கிகொண்டிருந்தீர்கள். ஆனால் கொஞ்சம் காலமாக, வித்தியாசமாக திரைப்பட துறைக்கு வெளியேயும் கலக்கி கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னவோ கேட்க நல்லாத்தான் இருக்குங்கோ! ஆனா, கூடவே கலயாணத்திற்கு அப்புறம் குழந்தை பிறக்குமா? அப்படியும் ஒரு பரிசோதனை செய்யலாம்.



அதுமட்டுமில்லீங்க! நம்மூரில் ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தனும் என சொல்லியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திற்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கோ! எனவே கல்யாண விசயத்தில் பொய் சொல்லாமல் பார்த்துக்கொள்ள பொய் சொல்வதை கண்டு பிடிக்கக்கூடிய கருவியை (Lie Detector) பயன்படுத்தி தான் திருமணங்கள் நிட்சயிக்கப்படவேண்டுமென சட்டம் கொண்டுவரனும்க!

இந்த பொய் சொல்லக்கூடியதை கண்டுபிடிக்கக்கூடிய கருவியை பயன் படுத்தியிருந்தால் சமீபத்தில் நிறைய திருமணங்கள் செய்து கலக்கிய "கல்யாண மன்னன்" போன்றவர்களிடம் பெண்கள் கற்பை இழக்காமல் தப்பித்திருப்பார்கள்! இந்த கற்பு என்று சொன்னதும் ஞாபகம் வருதுங்கோ கொஞ்சம் நாளுக்கு முன்னாடி குஷ்பு "மேம்" சொன்னாங்களே, திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பது ஒன்றும் தவறில்லை என! அவரோடு மேடையிலும் காட்சி அளித்தீர்களே! அப்படியானால் இதில் உங்களுக்கு உடன்பாடுதானே. பசங்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னும் பட்சத்தில் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை தேவை என சட்டம் கொண்டுவர சொல்லுவீங்களா ஆச்சி?

இது எல்லாவற்றையும் விட மேலாக டீ.என்.ஏ (DNA)எனும் பரிசோதனை செய்ய சொல்லி பசங்க உண்மையான வாரிசுதான் என்பதனை உறுதி செய்ய சொல்லலாம். அப்படி செய்யும்போது நிறையபேர்களின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் இல்லை எனக்கூட நிரூபணமாகலாம். இதையும்கூட உங்கள் பரிசோதனை பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!

துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!




இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பேசப்பட்டு வந்த ஒரு செய்தி.

என்னால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. காரணம் அரபு நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, விபச்சாரம் என இதில் எல்லாம் ஈடுபட்டு பிடிபட்ட வெள்ளைக்காரரல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல் போய் விடுவார்கள். மொத்த நிறுவனத்தையுமே கொள்ளையடித்துப்போன வெள்ளையர்களுமுண்டு. அதனால்தான் எனக்கு இந்த செய்தியை நம்ப முடியவில்லை.

ஒரு முறை பக்ரைனிலுள்ள பௌலிங் சென்டெரில்(Bowling Centre) அதன் பின்புறத்தில் ஒரு வெள்ளைக்காரனும் பிலிப்பினோ பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்குள்ள பாகிஸ்தானி காவலாளியால் பிடிக்கப்பட்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. வந்த காவல்துறையினர் வெள்ளைகாரனிடம் கைகுலுக்கிவிட்டு அவனை போக சொல்லிவிட்டனர். தடைப்பட்ட மீதி செக்ஸ்-ஐ வீட்டில் வைத்துகொள்கிறேன் என, அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அதே நேரத்தில், அது ஒரு இந்தியனோ, பாகிஸ்தானியோ, இலங்கைகாரனோ அல்லது பங்க்ளதேஷியோ என்றால் நிலைமையே வேறு. இஸ்லாமிய முறைப்படி தண்டனையை அரங்க்கேற்றி விடுவார்கள். இப்படி வெள்ளைக்காரனுக்கு அரபு நாட்டில் ஒரு தனி மரியாதையே உண்டு.

சரி இதாவது விபச்சாரம். கொலை செய்தாலோ?

இது சில வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள ராணுவ மருத்துவ மனையில் நடந்த சம்பவம். அங்கு நர்சாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிலிப்பினோ பெண்ணை, ஒரு வெள்ளைகாரி நர்ஸ் வேறு ஒரு பிலிப்பினோ நர்சுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள். அங்குள்ள சட்டப்படி கைது செய்து மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேர்மையான தீர்ப்பு என்று தானே நினைக்கிறீர்கள். இனிதான் வெள்ளைக்காரனின் வேலை தொடங்கியது. அப்போது டோனி பிளயர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அப்பெண்ணின் தலை அங்கு உருண்டால், இங்கு டோனி பிளயரின் தலை உருளும் என்பதை அறிந்த டோனி பிளயர், தனி விமானத்தில் சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்காரியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். ஆக வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் அரபு நாட்டின் நிலை.

ஆனால் துபாயில் எப்படி, இப்படி சுற்றுலா சென்ற வெள்ளைகாரனையும், வெள்ளைக்காரியையும் (Michelle Palmer, 36, of Oakham, and Vince Acors, 34)கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு கடற்கரையில் திறந்த வெளியில் உல்லாசத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் பிரச்சினை. வெள்ளைக்காரர்களுக்கு விபச்சாரம் என்ன தப்பா? என்பதுதான் கேள்வி. என்ன இருந்தாலும் இந்த விசயத்தில் துபாய்க்கு ஒரு "ஜெ" போடலாம். கொஞ்சம் மாதங்கள் வெள்ளைக்காரனை உள்ளே வைத்துவிட்டுதான் வெளியே விட்டார்கள்!

சனி, 11 ஜூலை, 2009

விஷம் விதைக்கும் சீமான்!

விஷம் விதைக்கும் சீமான்!




அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது உருப்படியாக இவர் போன்றவர்கள் செய்கிறார்களா? என்றால் இல்லை என்று சொல்லலாம். இன்றைய சூழலில் அகதிகள் முகாமில் அடைபட்டு அல்லல் படும் தமிழர்களை பாதுகாப்பதே அத்தியாவசிய தேவையே தவிர இந்தியாவில் இருந்துகொண்டு வீரவசனம் பேசுவதல்ல! இலங்கையை விடுங்கள், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களின் முகாம்கள்கூட சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் அதே நேரத்தில் திபத்திய அகதிகள் முகாம்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதை ஒரு பதிவர் படத்தோடு கூடிய ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார். (அந்த வலைப்பூவின் பெயரை மறந்துவிட்டேன்) அப்படி இருப்பின் அது மன்னிக்கமுடியாத குற்றம். அதை முதலில் தட்டிக்கேளுங்கள். அதை விட்டுவிட்டு இன்று அரசியல் தலைவர்போல மேடை தோறும் முழங்கி பிரிவினை என்னும் விசத்தை விதைத்து வருகிறீர்கள்.

பிரிவினைவாதம் ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல! கழகங்களின் காலத்தில் "அடைந்தால் திராவிட நாடு அல்லையேல் சுடுகாடு" என்று முழங்கியவர்களெல்லாம் பதவி கிடைத்ததும் கொள்கையை சுடுகாட்டில் போட்டு விட்டார்கள்!

அன்று அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு அடிமையான தமிழனால் ஆனானப்பட்ட காமராஜரின் ஆட்ச்சியே தூக்கி எறியமுடிந்தது. அதன் பின்னர் சில உதிரி கட்சிகள் பிரிவினையை பேசினாலும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் சீமான் தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து தலைகால் புரியாமல் உள்ளதுபோல உள்ளது. "தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு தவளை நடித்திருந்தால் அத்தவளைக்கும் கூட்டம் கூடும்".

ஒருமுறை முதல்வர் கருணாநிதி சென்று கொண்டிருந்தபோது சாலையை மறித்து ஒரு பெரும் கூட்டம் நடந்தது கொண்டிருந்ததாம் பாதுகாவலர்கள் சென்று விசாரித்தபோது, குள்ள நடிகர் தவக்களை பேசிக்கொண்டிருந்தாராம். ஆக கூட்டம்கூட தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தால் போதும் அது "தவக்களையாக இருந்தாலும்சரி, தவளையாக இருந்தாலும்சரி"
ஏனெனில் தமிழனுக்கு திரைப்படம்தான் எல்லாம்.

ஒருமுறை "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழச்சியை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடத்திய உமா என்ற பெண்மணியுடன் பேசக்கிடைத்த வாய்ப்பிற்கு ஒரு தமிழன் ஒரு உதாரணம் சொன்னான் பாருங்க! என் உடம்ப்பெல்லாம் புல்லரித்து போனது. அதாவது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, அங்கு புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் எவ்வளவு சந்தோசப்படுவானோ! அதைவிட மேலாக உள்ளது!! என்றான் பாருங்கள். ஆனானப்பட்ட விஞ்ஞானிகளான அப்துல்கலாம், அண்ணாத்துரைகூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்களாவென தெரியாது. அதுமட்டுமல்ல, எதோ ஒரு பத்திரிக்கை நடிகை ரம்பாவின் "தொடை" படத்தை வெளியிட்டு, இது யாருக்கும் சொந்தமானது என ஒரு புரட்சியை வெளியிட்டிருந்ததாம். விசேசம் என்னவென்றால் பதில் அனுப்பிய எல்லா தமிழனுமே சரியாக எழுதியிருந்தானாம். அதிலும் ஒரு அதிபுத்திசாலி தமிழன், அத்தொடை எனக்கு சொந்தமானது என எழுதியிருந்தானாம். இதிலிருந்தே தெரியும், தமிழனுக்கும் திரைப்படத்திற்கும் எவ்வளவு உறவு என்று.

எனவே உங்களுக்கு கூடும் கூட்டத்தினருக்கு பிரிவினையை புகட்டுவதை நிறுத்திவிட்டு அகதிகள் முகாமில் அடைபட்டிருக்கும் அப்பாவிகளுக்கு, ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா? என பாருங்கள். அதை விட்டுவிட்டு இன்று, இலங்கையில் எதாவது சிங்கள தீவிரவாத இயக்கங்கள் குண்டு வைத்தாலும் அது விடுதலை புலிகள் வைத்ததென சொல்லி, அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அடிவாங்க வைக்காதீர்கள்.

வெள்ளி, 29 மே, 2009

கோரிக்கையை ஏற்ற முதல்வர்!


கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
நான் எனது முந்தைய பதிவான "நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?" http://tamilcatholican.blogspot.com/2009/05/blog-post_23.htmlவில் முதல்வர், தனது மகனை முதல்வராக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். ஆனால் முதல்வராக்காவிட்டாலும் குறைந்தபட்சம் துணை முதல்வராகவாவது ஆக்கியுள்ளார். அதற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் ஸ்டாலின் முதல்வரானாலும் ஆவார். இது வெள்ளோட்டமாககூட இருக்கலாம். இருந்தாலும் முதல்வர் தன பதவியை துறப்பது இளைய சமுதாயத்திற்கு அவர் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும். அவர் வீட்டில் இருந்தாலும்கூட அவரின் ஆலோசனையின்படிதான் ஸ்டாலின் செயல்படுவார். ஏன்? தி.மு.க வே அவர் மறையும்வரை தலைவராகவே வைத்துக்கொள்ளும். அதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

இன்றுதான் நாம் பார்க்கிறோமே! எடுத்ததற்கும் பிடித்ததற்கும் அன்னை சோனியாவின் அனுமதியில்லாமல் ஏதாவது காங்கிரசில் நடக்கிறதாவென்று? பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும், பிடி என்னவோ சோனியாவிடம்தான். அதுமாதிரிதான் இதுவும். இருந்தாலும் கஷ்டப்பட்டு நகரும் நாற்காலியிலிருந்து நாடாளுவதிலிருந்து கொஞ்சம் விடுதலை. முழுவதுமாக விடுதலை கிடைத்திட முதல்வர், முதல்வர்,பதவியை முழுவதுமாக மகனுக்கு வழங்கிவிட வேண்டும். வழங்குவார்! அதுதானே அவரின் விருப்பமும்!!

சனி, 23 மே, 2009

நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?





சில காலமாகவே தமிழக முதல்வர் நகரும் நாற்காலியின் துணையுடன்தான் நடமாடி வருகிறார். இப்படி கஷ்டப்பட்டு அவர் நடமாடுவதை பார்க்கும்போது என்னவோ மனசிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது.


ஒரு பழுத்த அரசியல் வாதியான முதல்வர், "பதவி என்றால் பசைபோட்டு" ஒட்டிக்கொள்ளக்கூடியவர். இந்தியாவின் தொங்கு பாராளுமன்றங்கள் மாநில அளவில் இருந்த இவர்களை, இந்திய அளவில் பதவிகளை பிடிக்க வழிவகை செய்து கொடுத்துவிட்டது. ஒரு சமயத்தில் தேசிய கட்சிகளை மிரட்டி கூட மந்திரி பதவிகளை பெற்று விடுகிறார்கள்.



அது எப்படியும் இருக்கட்டும். இந்த தள்ளாடும் வயதிலாவது தானே முன்வந்து, முதல்வர் பதவியை துறக்கலாமே! அப்படி துறந்தால், கழக கண்மணிகள் என்ன அன்பழகனையா முதல்வர் ஆக்குவார்கள்? உங்கள் வாரிசு ஸ்டாலின்தானே முதல்வர் ஆவார்! எப்படியும்


உங்களின் காலத்திற்குப்பின் ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார். அது தமிழகத்தின் தலைவிதியாககூட இருக்கலாம். அதை நீங்கள் இருக்கும்போதே, "இளைய தலைமுறைக்கு" (இளைய தளபதிக்கு) வழிவிடுகிறேன் என சொல்லி அவரை முதல்வராக அழகு பார்க்கலாமே. அதுதான் உங்களின் ஆசையாகக்கூட இருக்கலாம்.



என்ன? மதுரையின் மகாராஜா! அதுதாங்க! அழகிரி கோபப்படுவார் என, நீங்கள் நினைப்பது புரியுது. இருந்தாலும் அவர் பாராளுமன்றம் சென்று விட்டதால் அதைப்பற்றி கவலை படவேண்டாம். முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள். தற்போது நீங்கள் ஸ்டாலினுக்கு வழிவிடுவது இளைய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும்.

இப்படி கஷ்டப்பட்டு, நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

செவ்வாய், 5 மே, 2009

பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?

பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?

போராட்டம் என்பது இல்லாத ஒன்றை பெறுவதற்காகவோ அல்லது இருக்கின்ற ஒன்றை அதிகமாக பெற்றிடவோ நடத்தப்படுவது. ஆனால் பெண்கள் எதற்காக இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.



இந்திய அரசியல் சட்டத்தின் படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்?



இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டனர். இவர்கள் எல்லாம் பெண்களுக்கான இட ஒதுக்கீடின்படி வந்தவர்களா என்ன? இல்லையே....இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பெண்கள் எவ்வளவு முன்னேறி உள்ளார்கள் என பாருங்கள். அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் முன்னேறி உள்ளனர். இதைப்போல அரசியலிலும் பெண்கள் இன்று இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் நிட்சயமாக நுழைந்து அதை ஆக்ரமிப்பார்கள்.

அதற்கு இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் நீங்கள் என்ன கேட்கிறீர்கள். எங்களுக்கு 33 சதவிகிதம் வேண்டுமென.



சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், மீதியை ஆண்களுக் கென்று ஒதுக்குவார்களா? நாளை இதனால் போட்டியிட விரும்பும் ஆணோ பெண்ணோ அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட முடியாதபடியாகும்.நிட்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம்.



மீண்டும் இப்போது இருக்கின்ற சட்டத்தை திரும்ப கொண்டுவரும்படி பெண்கள் போராடவேண்டிய நிலைமை வரலாம். காரணம் அப்போது அவர்களுக்கு முப்பத்திமூன்று சதவிகிதம் என்பது பெண்களை சரிசமமாக பார்க்கவில்லை என தோன்றும். அதற்கு இப்போது இருக்கின்ற சட்டமே மேல்.


இன்றைய சட்டத்தில் நீங்கள் இத்தனை தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென எங்காவது இருக்கிறதா? அப்படி இல்லையெனில் எதற்காக 33 சதவிகிதம் கேட்டு போராடுகிறீர்கள்.

நீங்கள் போட்டியிட தயங்குகிறீர்கள் என்பதுதான் உண்மையே ஒழிய வேறொன்றுமில்லை.

நீங்கள் தேர்தலில் போட்டியிட இப்போது இருக்கின்ற கட்சிகளில் சேர்ந்துதான் போட்டி இட வேண்டும் என்றில்லை. சமூக சேவை செய்யும் சங்கங்கள் வழியாக நிற்கலாமே! இன்று போராட்டம் என்பது அர்த்தமில்லாத ஒன்றாகி விட்டது அரசே அதற்கெதிராக கடையடைப்பை செய்து கேலிகூத்தாக்கிகொண்டிருக்கிறது. எனவே பெண்களே! இட ஒதுக்கீட்டிற்காக போராடாதீர். ஏனெனில் இன்றைய சட்டம் நூறு சதவிகிதம் உங்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. சிந்தியுங்கள் பெண்களே!

புதன், 29 ஏப்ரல், 2009

அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?


அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?

உலகில் நாடுகளுக்குள் ஏற்படும் பிரட்சினைகளை தீர்த்து வைப்பதற்க்கென்றே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை இன்று என்னவோ பெயர் அளவிற்குத்தான் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இதன் தீர்மானங்களை எந்த ஒரு நாடும் பின்பற்றுவதே கிடையாது என்பதுதான் உண்மை.


போதா குறைக்கு "வீட்டோ" என்னும் உருப்படாத ஒரு அதிகாரம் அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு வழங்க பட்டிருப்பதால் இந்த "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி இந்த குறிப்பிட்ட நாடுகளால் எந்த ஒரு முடிவையும் நிறைவேற்ற முடியாமல் செய்ய முடிகிறது.



இதை இஸ்ரேல் விசயத்தில் அமெரிக்கா பல முறை நிரூபித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா தன்னை சட்டம்பி போல காண்பித்துகொள்வதால் சில நாடுகள் ஐக்கிய நாட்டு படைகளுக்கு பதிலாக அமெரிக்க படைகளையே விரும்புகின்றன. இப்படி சில நாடுகள் செய்ய தொடங்கியதாலும் (குறிப்பாக அரபு நாடுகள்) இன்னும் சில நாடுகளுக்குள் தானே மூக்கை நுழைத்தும் அமெரிக்கா இன்று சர்வதேச போலீஸ் போல செயல்படுகிறது.

ஒரு காலத்தில் வியட்நாமின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிய அமெரிக்கா, அதன் பின்னர் கொஞ்சம் கவனமாகவே மூக்கை நுழைக்கிறது.
முன்னாள் அதிபர் புஷ்ஷின் காலத்தில் அரபு நாடுகளுக்குள் தன படைகளை இறக்கிய அமரிக்கா இன்றுவரை அங்கு பாதுகாப்பு என்னும் பெயரில் நிரந்தரமாகவே உள்ளது. அதனால் என்ன? நன்மை தானே என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.

அமரிக்கா படைகள் குறிப்பிட்ட வருட ஒப்பந்த அடிப்படையிலேயே வரும். அதுவும் அதற்கான் செலவு கூட சம்பந்தபட்ட நாடுகள் கொடுக்கவேண்டி வரும். இது நம்மூரில் பிரபலங்கள் பணம் கொடுத்து பாதுகாப்பாளியை வைத்து கொள்வதுபோல.




.


அரபு நாடுகளில் மூக்கை நுழைக்க முக்கிய காரணம் புஷ் எண்ணைக்கிணறுக்கு சொந்தக்காரர் என்பதுதான். இது நம்மில் பலபேருக்கு தெரியாத ஒன்று. இந்த புஷ் A to Z வரை பெட்ரோல் பற்றி தெரிந்த தொழிலதிபர்

இன்றுவரை ஈராக் நாட்டின் எண்ணை அமரிக்கா விருப்பப்பட்ட இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த அமரிக்க படைவீரர்கள் பாலைவனத்தில் நிற்பதை தொலைக்காட்சிகளில் பார்ப்பீர்கள் பணிமுடிந்த பின்னர் நீச்சல் குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில்தான் குளிப்பார்கள். மூன்று மாதம் தான் பாலைவனபணி. பின்னர் அமரிக்கா சென்று விடுவார்கள் இவர்களின் அத்தனை செலவுகளையும் சம்பந்த பட்ட நாடுகள் குறிப்பாக குவைத் சவுதி அரேபியா ஈராக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

எண்ணையை மூலதனமாக கொண்டிருந்த சவுதி அரேபியா இன்று கடனாளி. அமரிக்கா நுழைந்தால் பணக்கார நாடும் பிச்சைகாரநாடாக மாற வாய்புண்டு என்பதற்கு இது உதாரணம்.

ஆக .


ஆதாயமில்லாமல் அமரிக்கா ஆற்றில் இறங்காது. இலங்கையில் அமரிக்கா இறங்க அங்கு தோண்ட தோண்ட பெட்ரோளா கிடைக்கிறது. பிணம்தானே கிடைக்கும்

அப்படியே அமரிக்கா இலங்கைக்குள் நுழைந்தாலும் அது நிட்சயமாக தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. அமைதிப்படையாக நுழைந்த இந்திய படையை போல ஆகலாம்.




ஒரு சிறிய ஆறுதல் அமரிக்க படைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒபாமா திரும்ப அழைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பது.

திங்கள், 27 ஏப்ரல், 2009

தாமரை என்னும் திடீர் தலைவி!

தாமரை என்னும் திடீர் தலைவி!


ஈழத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து இன்று தோன்றும் தலைவர்களின் எண்ணிக்கை என்னவோ கூடிக்கொண்டுதான் இருக்கிறதே ஒழிய ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீருகிறதா என்று பார்ப்போமெனில் நிட்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

ஏற்கனவே உள்ள திடீர் தலைவர்களான சீமான் பாரதி ராஜா போன்றோர் பின்னுக்கு போகவேண்டிய கட்டாயத்திற்கு இந்த தாமரையால் தள்ளப்பட்டு விட்டார்கள். இவரின் அனல் கனக்கும் பேச்சை கேட்டு சகிக்காத அல்லது பொறாமை பட்டு உடனே நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளார் பாரதி ராஜா, எனில் பார்த்து கொள்ளுங்களேன். ஏற்கனவே ஜூனியர் சீமான் மேல இருப்பதால் மனம் நொந்துபோயுள்ள ராஜாவிற்கு நேற்று வந்த பெண் ஒரே அடியா மேலே போனா வருத்தமாகதானே இருக்கும்.


ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் அரசியலில் ஏற்கனவே கருணாநிதியா? ஜெயலலிதாவா? கோபால்சாமியா? ராமதாஸா? அல்ல திருமாவளவனா? என தலைவர்கள் அடித்து கொள்ளும் போது, போதா குறைக்கு திரைப்பட துறையும் சேர்ந்துள்ளது.



ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர இலங்கை, இந்தியா, ஐக்கிய நாட்டுசபை இவை பேசித்தான் தீர்வு காண முடியுமே ஒழிய இதைமாதிரி பொடி பொடி தலைவர்கள் பேசி அல்ல. இவை எல்லாம் பத்திரிகைகளுக்கு தீனியாகவும் வாசகர்களுக்கு கேட்க சந்தோசமாகவும் இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.


எதுவாக இருந்தாலும் பேனா பிடிக்கும் கையால் துப்பாக்கி பிடிக்க தயார் என்னும் நிலைமையில் இவர் உள்ளதால் வை. கோபல்சாமியை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே கள்ள தோணியில் இலங்கை சென்று வந்தவர் என்பதால் இவர் எளிதாக உங்களை அழைத்து செல்வார். இல்லையென்றால் பழ நெடுமாறனை தொடர்பு கொள்ளலாம். இவரும் கடலில் பாதி தூரம் போய்வந்தவர்தான். ஆனால் இந்த பாரதி ராஜாவோ அல்லது சீமானோ உங்களை இலங்கைக்கு அழைத்து செல்லமாட்டார்கள்.


இது எல்லாவற்றையும் விட மேல் நீங்களே தலைமை தாங்குவது! ஏற்கனவே அன்னை சோனியா, அம்மா புரட்ச்சி தலைவி, மாயாவதி, உமா பாரதி, மம்தா பானர்ஜீ என பெண்கள்தான் இந்தியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

வியாழன், 23 ஏப்ரல், 2009

ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!

ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!

ஈழத் தமிழர்களின் பிரட்ச்சனை இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கும் சில தலைவர்களுக்கும் ஒரு பிழைப்பாகவே போய் விட்டது. இந்த ஈழத் தமிழர்களின் பிரச்சனையானது 1983 இல் தொடங்கியது. அப்போது எத்தனை பேர் குரல் கொடுத்தார்கள் இன்று எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள் என பார்த்தால் புரியும். அதிலும் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தலைவர்கள் தோன்றி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்களின் மேல் பாசம் கொண்டு செயல் படுகின்றார்களா? என பார்ப்போமெனில் நிட்சயமாக இருக்காது.




தமிழக முதல்வரை பொறுத்தவரை அவருக்கு பதவிதான் முக்கியம். அந்த பதவியை தக்க வைத்து கொள்வதற்கான் வழிமுறையின் படியே இவரின் பேச்சி இருக்கும். ஒரு நாள் ஆதரிப்பார்! மறுநாள் ஆதரிக்கமாட்டார்! இவரால் தர்ம சங்கடத்திற்கு ஆளாபவர்கள் உடன்பிறப்புக்களும், அரசு அதிகாரிகளும்தான். எப்போது எதை உளறுவார் என தெரியாது.

பாவம் உடன்பிறப்புக்கள்.

வை.கோபால்சாமி இந்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே கடவு சீட்டு இல்லாமல் இலங்கையினுள் கள்ளத்தனமாக நுழைந்தவர். இவர் அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்.



.


இந்திரா காங்கிரஸ்காரர்களுக்கு எங்கே நம் தலைவரை கொன்ற புலிகளை எப்படி ஆதரிப்பதென ஒரே குழப்பம். இந்த விடுதலை புலிகளுக்கு இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? இவர்களின் இன்றைய அறிக்கைகள் "வெந்த புண்ணில் வேல்ஐ பாய்ப்பதுபோல" உள்ளது

விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்றால் அதற்கு ஈழ மக்களை பழி வாங்குவது என்ன நியாயம்?

திருமாவளவன், ராமதாஸ் இவர்களின் பேச்சும் கூட்டணி தர்மத்திற்கேற்ப அமையும்.

இதில் இப்போது திடீர் தலைவர் ஆகியுள்ள பாரதி ராஜா, சீமான் ஆகியோரையும் சொல்லவேண்டியுள்ளது. இந்த பாரதி ராஜா இத்தனை வருசமாக என்ன செய்தாராம்?
ஸ்ரீ தேவியை தவிர எத்தனை தமிழ் கதாநாயகிகளை நடிக்க வைத்துள்ளார் அல்லது அறிமுக படுத்தியுள்ளார்?


இந்த சிகர இயக்குனர் "தமிழச்சி" என பெயர்வைத்து படம் எடுப்பார், ஆனால் தமிழ் தெரியாத பெண்ணாக தேடி பிடித்து அறிமுகப்படுத்துவார். இவருக்கு இப்போதுதான் ஞானம் வந்திருக்கிறதுபோல. ஏன் நடிகை ராதிகா கூட சிங்கள பெண்ணாகவே தமிழகத்தில் நுழைந்தார். தமிழ் படத்தில் பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தபட்டபோது அவருக்கு தமிழ் தெரியாது. இதை ராதிகாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சீமானும் அப்படித்தான். தன் திரைப்படத்தில் எத்தனை தமிழ் பெண்களை கதாநாயகிகளாக அறிமுக படுத்தியுள்ளார்? இவர் அறிமுக படுத்திய பூஜா கூட சிங்கள பெண்தானே! இந்த பூஜா "என்கு குஞ்சு குஞ்சு தமில் தறியும்" என பேசுவதை பார்த்து பூரித்துப்போன சீமான் அறுபது மதிப்பெண்கள் கொடுத்தாராம் அவரின் தமிழிற்கு. நிஜமாக இது நான் படித்தது. இவர்களெல்லாம் தங்களை முதலில் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

போகிற போக்கை பார்த்தால் தமிழக தலைவர்கள் இப்படி "ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!"என்னும் அடைமொழியை இட்டு பேசினாலும் பேசுவார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை வித்து பிழைப்பவர்கள்.
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!