நாங்களும் உங்களை கண்காணிக்கிறோம்!
என்னும் என்னுடைய பதிவு, நிறைய வலைத்தளங்களில் அவர்களின் பதிவு போல பதியப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நான் ஒன்றும் அவர்களைப்போல பிரபல பதிவர் அல்ல. குறைந்தது என் பெயரையோ, அல்லது என் இணைப்பையோ கொடுத்திருந்தால் நான் இப்படி ஒரு பதிவை வெளியிட அவசியம் இருந்திருக்காது.
இடி முழக்கம், இவர் முன்னால் நான் சின்ன ஒரு பதிவர்தான். பாருங்கள் எவ்வளவு பேர் இவரை பின் தொடர்கிறார்கள்.
இவரும் என் பதிவை தன் பதிவுபோல பதிந்துள்ளார்!
தமிழ் நியுஸ்
தமிழ் நியுஸ், என்னோட பதிவை போட்டுக்கிட்டு கீழே, கோப்பி ரைட் வேற!
தமிழ்நிருபர்.காம் இவரும் என் பதிவின் தலைப்பை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
சமுதாய உரிமை, என்ன அழகான பெயர் வைத்துள்ளார் பாருங்கள். திருட்டு பதிவை வைத்துக்கொண்டு. பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
ஆகாயம், இவர் பிறரைப்போல தலைப்பை மாற்றவில்லை. அப்படியே பதிந்துள்ளார்.
உதயம், இவரும் என் பதிவின் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
முல்லைக்கதிர், இவர் என்னுடைய எல்லா தொழில்நுட்ப பதிவுகளையும் தன்னுடையதை போல போட்டுள்ளார். அதுமட்டுமல்ல pudhuvai.com இன் பதிவுகளையும் போட்டிருக்கிறார்.
அதிரை எக்ஸ்பிரஸ், இவரும் தலைப்பை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
இவருடைய வலைப்பூவின் பெயரை பாருங்கள், சத்தியபாதை: பெயரை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
சுவாமிமலை எக்ஸ்பிரஸ்காரரும் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
இவர் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
இவர் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
சிந்திக்கவும், இவரும் என் பதிவை போட்டுள்ளார்.
இதில் முத்துமணி என்பவர் அவருடைய தளத்தில் என் பதிவை வெளியிட்டிருந்தார். சுட்டிக்காட்டியதும் என் இணைப்பை இப்போது போட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்!
9 கருத்துகள் :
என்னால நம்பவே முடியல்ல!
www.dailypcnews.blogspot.com
//என்னால நம்பவே முடியல்ல!//
வருகைக்கு நன்றி! என்னாலும்தான் நம்ப முடியல்ல! இப்படி எல்லாம் பதிவிடுவார்களா?
என்னால நம்பவே முடியல்ல!
ippadiyum pathivarkala...??????????
//சே.குமார் said...
என்னால நம்பவே முடியல்ல!
ippadiyum pathivarkala...??????????//
கருத்திற்கு நன்றி குமார்!
இப்படி நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். பதிவுகளின் உண்மையான பதிவர் யாரென்று கண்டு கொள்ள முடிவதில்லை.
ரொம்ப கஷ்டம்தான் நாமும் கஷ்டப்பட்டு சிந்தித்து குறிபெடுத்து தொகுத்து பதிவை போடுறோம் இப்பை நோவாம நுங்கு உரியுராங்கலே என்ன பண்றது.........யாரும் copy பண்ண முடிடாத அளவுக்கு program ஏதும் செட் பண்ணுங்க...
//rk guru said...
ரொம்ப கஷ்டம்தான் நாமும் கஷ்டப்பட்டு சிந்தித்து குறிபெடுத்து தொகுத்து பதிவை போடுறோம் இப்பை நோவாம நுங்கு உரியுராங்கலே என்ன பண்றது.........யாரும் copy பண்ண முடிடாத அளவுக்கு program ஏதும் செட் பண்ணுங்க..//
கருத்திற்கு நன்றி! அப்படி சில வழிமுறைகள் இருக்கிறது. இருந்தாலும் அதையும் தாண்டி வெட்டி ஒட்டுதல் செய்ய முடியும்.
எப்படி இதை இவ்ளோ easya எடுதுகிடீங்க...கோப்பி அடிச்ச நாய்களை ஒரு வழி பண்ண வேணாம்?
அன்பு நண்பருக்கு
வணக்கம்.
தங்களைப் போலவே பாதிக்கப்பட்டவன்தான் அடியேன்.
என் கட்டுரைகள் கதைகள் யார் யார் பெயரிலோ பெயர் இல்லாமலோ உலா வந்துகொண்டு உள்ளன.
முதலில் வெந்து போனேன் பிறகு நொந்து போனேன்.இப்போதெல்லாம் கண்டு கொள்வது இல்லை.
நம் படைப்பு சிறப்பாக இருப்பதால்தானே
நமக்குச் சிரமம் வைக்காமல் பிறர் வெளியிடுகிறார்கள். போகட்டும்!
"தந்தையே இவர்கள் செய்வது என்ன என்று அறியாமல் செய்கிறாறார்கள். இவர்களை மன்னியும்"!
தங்களுக்கு என் அனுதாபங்கள்.
இப் பழக்கத்தைத் தடுக்க நான் கையாளும் வழி :
படைப்புகளை JPG பட வடிவில் வெளியிடுவதுதான்.
இணைய இதழ்களில் இப்படி வெளியிட இயலாது.
"திருடராயப் பார்த்துத் திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது" (பட்டுக்கோட்டையார்).
அன்புடன்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
பிரான்சில் இருந்து
உங்கள் கருத்திற்கு நன்றி பேராசிரியர் பெஞ்சமின் அவர்களே! நான் இப்போது இவைகளை கண்டுகொள்வதில்லை.
கருத்துரையிடுக