.

Loading...

வியாழன், 16 ஏப்ரல், 2009

கோழைகளை போற்றும் வலையுலகம்!

கோழைகளை போற்றும் வலையுலகம்!

மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்களை இன்று ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த போராட்ட தியாகி போல பல வலைதளங்களில் அவர்களின் புகைபடத்தையும் வெளியிட்டு தாங்களும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என நிருபித்து வருகின்றனர்.



உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு தமிழனும் ஈழத் தமிழனுக்காக குரல்கொடுப்பான். ஆனால் இப்படி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்பவர்களை ஈழத்திற்காக உயிர் கொடுத்தான் என தயவு செய்து சொல்லாதீர்கள்.


நீங்கள் அப்படி அவர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டு தியாகி போல சித்தரிக்கும்போது இதைபோல மன உளைச்சல் உள்ள பல தமிழர்களும் ஓகோ நாமும் இப்படி செய்தால் நம்மையும் இப்படி போடுவார்கள் என நினைத்து தற்கொலை செய்தாலும் செய்வார்கள். பலரும் தற்கொலை செய்துகொள்ள நீங்கள் தூண்டுகோலாக இருக்காதீர்கள்.

முன்பு தமிழகத்தில் தீக்குளித்து தொண்டர்கள் உயிர்நீதததாக படித்திருப்பீர்கள் அதில் பெரும்பாலும் தீக்கொளுத்தி கொல்லப்பட்டார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.
தமிழக அரசியல் வாதிகளுக்கு ஈழம் ஒரு பிழைப்பே.


பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அதற்காக துறப்பவர்கள் ஏன் ஈழபிரச்சனை தீராத வரையில் பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கு தேவை இல்லையென புறக்கணிக்க வேண்டியதுதானே.


அதை செய்யமாட்டார்கள் ஆனால் முடிந்தவரை தொண்டர்களை தெருவில் இறங்கி போராடமட்டும் சொல்வார்கள். இப்படி தொண்டர்களுக்கு மன உளைச்சலை உண்டுபண்ணி விடுவார்கள்.



ஈழமண்ணில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுபவன் தான் உயிர் தியாகம் செய்பவனே தவிர இந்திய மண்ணில் தற்கொலை செய்துகொள்பவன் அல்ல.


உங்களுக்கு அப்படி ஈழத் தியாகிகள் படங்களை பிரசுரிக்க வேண்டுமெனில் ஈழத்தில் போராடி உயிர்நீத்தவனை போடுங்கள். அதை விட்டுவிட்டு கோழைகளை அங்கிகரிக்காதீர்கள்.

இதை நான் சொல்ல காரணம் நல்ல பதிவுகளை கொடுக்கின்ற சில வலை பதிவர்கள் இப்படி இந்த கோழைகளின் படத்தை வெளியிட்டிருப்பதால்தான். இப்படி தற்கொலை செய்வதால் ஈழம் மலருமா? சிந்தியுங்கள் தமிழர்களே இது நிட்சயமாக தீர்வல்ல!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!