.

Loading...

திங்கள், 5 டிசம்பர், 2011

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.


இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்த்தபடி பெற்று அதில் இந்த சோலார் பனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.


தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.

24 கருத்துகள் :

GANESH சொன்னது…

super post.........

Selvaraj சொன்னது…

GANESH said...
super post.........

//கருத்திற்கு நன்றி கணேஷ்!//

ABUBAKKAR K M சொன்னது…

To be discussed conciderably

ganesan சொன்னது…

Very Good And Useful

eshan சொன்னது…

மிகவும் உருப்படியான பதிவு. தமிழக அரசு சூரிய சக்தி மின்சாரம் பட்ரிய விழிப்புனர்வையும், அதர்கான முயர்சியுடன் மானியத்தையும் வழங்கி மின் பட்ராக்குரை பிரச்சினைக்கு முட்ருபுல்லி வைக்க வென்டும்.‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
-பரமன். பெ

Selvaraj சொன்னது…

ABUBAKKAR K M said...
To be discussed conciderably

//உங்கள் கருத்திற்கு நன்றி அபுபக்கர்!//

Selvaraj சொன்னது…

ganesan said...
Very Good And Useful

//கருத்திற்கு நன்றி கணேசன்!//

Selvaraj சொன்னது…

eshan said...
மிகவும் உருப்படியான பதிவு. தமிழக அரசு சூரிய சக்தி மின்சாரம் பட்ரிய விழிப்புனர்வையும், அதர்கான முயர்சியுடன் மானியத்தையும் வழங்கி மின் பட்ராக்குரை பிரச்சினைக்கு முட்ருபுல்லி வைக்க வென்டும்.‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
-பரமன். பெ

//கருத்திற்கு நன்றி பரமன்!//

AND KRISHNAMOORTHY சொன்னது…

அருமையான பதிவினை பதிந்து மக்களுக்கும் அரசுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு பதிவினை செய்தமைக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே!!! இப்பதிவினை கண்டு படித்த பின்பு எனது வீட்டிற்கு தேவையான மின்சக்தியினை நானே தயாரித்துக் கொள்ள விழைகின்றேன். இதனைப் பற்றிய மேலதிக விளக்கங்களை, செயல் முறை விளக்கங்களை, அன்புடன் பதிவு செய்ய வேண்டுகின்றேன். அன்புடன் கே எம் தர்மா...

Selvaraj சொன்னது…

andkm said...
அருமையான பதிவினை பதிந்து மக்களுக்கும் அரசுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய ஒரு பதிவினை செய்தமைக்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே!!!

//உங்கள் கருத்திற்கு நன்றி அய்யா. இவற்றிற்கு தேவையான பொருட்கள் இங்கிலாந்தில் தாராளமாக கிடைக்கிறது. இந்தியாவில் இவை கிடைக்குமிடம் தெரியவில்லை. இதன் செய்முறையுடன் கூடிய பதிவினை விரைவில் பதிகிறேன்//.

புன்னகை சொன்னது…

mika arumaiyaana thakaval.....

Selvaraj சொன்னது…

யாவரும் கேளிர் said...
mika arumaiyaana thakaval.....

//உங்களின் கருத்திற்கு நன்றி!//

Gnana சொன்னது…

"ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்" என்பது --- 'ஒரு நாளைக்கு 1000 வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்'-- என்று இருக்கவேண்டும். மேலும் சுமார் 1700 – 1900 kWh/kW கிலோவட் ஹோவர்/கிலோவட், இதிலிருந்து பெறமுடியும். http://www.newscientist.com/article/mg21328505.000-indias-panel-price-crash-could-spark-solar-revolution.html -- விலைகள் இங்கே சுமார் $1.2 to 1.6/Watt --- http://india.alibaba.com/country/products_india-solar-panel-price.html -- India

The Indian Renewable Energy Development Agency (IREDA) provides revolving fund to financing and leasing companies offering affordable credit for the purchase of PV systems in India.

State Utilities are mandated to buy green energy via a Power Purchase Agreement from Solar Farms

The Ministry of New and Renewable Energy has launched a new scheme (Jan 2008) for installation of Solar Power Plants. For the producer, a Generation-based subsidy is available up to Rs. 12/kWh (€ 0.21/kWh) from the Ministry of New and Renewable Energy, in addition to the price paid by the State Utility for 10 years.

The State Electricity Regulatory Commissions are setting up preferential tariffs for Solar Power

Rajasthan - Rs. 15.6 (€ 0.27) per kWh (proposed) West Bengal - Rs. 12.5 (€ 0.22) per kWh (proposed) Punjab - Rs. 8.93 (€ 0.15) per kWh[citation needed]

80% accelerated depreciation Concessional duties on import of raw materials Excise duty exemption on certain devices. Tamil Nadu goes with only state policy only! -- http://en.wikipedia.org/wiki/Financial_incentives_for_photovoltaics#India -- What you see on a Canadian link -- http://www.cmhc-schl.gc.ca/en/co/maho/enefcosa/enefcosa_003.cfm

Selvaraj சொன்னது…

Gnana said...
"ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்" என்பது --- 'ஒரு நாளைக்கு 1000 வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்'-- என்று இருக்கவேண்டும். மேலும் சுமார் 1700 – 1900 kWh/kW கிலோவட் ஹோவர்/கிலோவட், இதிலிருந்து பெறமுடியும். http://www.newscientist.com/article/mg21328505.000-indias-panel-price-crash-could-spark-solar-revolution.html -- விலைகள் இங்கே சுமார் $1.2 to 1.6/Watt --- http://india.alibaba.com/country/products_india-solar-panel-price.html -- India

//உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா!//

M. Hussainghani. சொன்னது…

காலத்திற்கேற்ற நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரரே...

Selvaraj சொன்னது…

M. Hussainghani. said...
காலத்திற்கேற்ற நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரரே...

//கருத்திற்கு நன்றி ஹுசைன்கனி!//

காந்தி பனங்கூர் சொன்னது…

ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் எப்படி கொள்ளையடிப்பது, எப்படி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது என்பதை யோசிக்கவே நேரம் இருக்காது. இதில் எங்கே மக்களைப் பற்றி சிந்திக்க...

கண்டிப்பாக என் வலைதளத்திலும் முக நூலிலும் பகிர்கிறேன். நன்றி.

nandha சொன்னது…

மிகச்சிறந்த பதிவு.....
தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்

G.AruljothiKarikalan சொன்னது…

மிகவும் அவசியமான ஒன்றுதான்....... நானும் இதை பற்றி படிதிருகிறேன்... எங்கள் வீடில் இதை அமுல்படுத்த யோசித்துகொண்டிருகிரோம் ஆனால் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பது பற்றி அய்யம் உள்ளது???

Selvaraj சொன்னது…

காந்தி பனங்கூர் said...
ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் எப்படி கொள்ளையடிப்பது, எப்படி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது என்பதை யோசிக்கவே நேரம் இருக்காது. இதில் எங்கே மக்களைப் பற்றி சிந்திக்க...

//உங்கள் கருத்திற்கு நன்றி காந்தி!//

Selvaraj சொன்னது…

nandha said...

மிகச்சிறந்த பதிவு.....
தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்

//கருத்திற்கு நன்றி நந்தா! தேவையில்லா விசயங்களை பகிர்வோர்தான் திரட்டிகளின் முன்னணி பதிவர்கள்!!//

Selvaraj சொன்னது…

G.AruljothiKarikalan said...

மிகவும் அவசியமான ஒன்றுதான்....... நானும் இதை பற்றி படிதிருகிறேன்... எங்கள் வீடில் இதை அமுல்படுத்த யோசித்துகொண்டிருகிரோம் ஆனால் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பது பற்றி அய்யம் உள்ளது???

//கருத்திற்கு நன்றி அருள்ஜோதி! இதற்கு பராமரிப்பு தேவையில்லை என்றே சொல்கிறார்கள்!//

உங்களில் ஒருவன் சொன்னது…

மிகவும் அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி.......நான் இதை bookmarks போட்டு வைத்து விட்டு என்னிடம் பணம் சேர்ந்தவுடன் தொடங்கலாம் என நினைக்கிறேன்.....நன்றி....

Selvaraj சொன்னது…

உங்களில் ஒருவன் said...
மிகவும் அருமையான பதிவு...தகவல்களுக்கு நன்றி.......நான் இதை bookmarks போட்டு வைத்து விட்டு என்னிடம் பணம் சேர்ந்தவுடன் தொடங்கலாம் என நினைக்கிறேன்.....நன்றி....

//உங்கள் கருத்திற்கு நன்றி ஐயா!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!