
பிறருடைய வங்கி அட்டையை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இருந்தாலும் சில நேரங்களில் நம் குடும்ப்பத்தில் உள்ளவர்களின் அட்டையை நாம் பயன்படுத்துவோம், சில நேரங்களில் இப்படி பயன்படுத்தும் போது நாம் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி ஒருமுறை நானும் சிக்கிக்கொண்டேன்.
இங்குள்ள "பிரைமார்க்" என்னும் துணிக்கடையில் வாங்கிய துணி ஒன்று சரியில்லாததால் திரும்ப கொடுக்க சென்றிருந்தேன். இங்கு எந்த கடையிலுமே நமக்கு வாங்கிய பொருள் திருப்தி இல்லையெனில் அதை இருபத்தி ஒன்பது நாட்களுக்குள் திரும்ப கொடுத்து முழு பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்பொருள் பயன் படுத்தாமல் இருக்கவேண்டும், மீண்டும் அவர்கள் விற்கும்படியாகவும் இருக்கவேண்டும். இது என்மனைவி வாங்கிய துணி. அவளும் கூட வந்திருந்தாள். ஆனால் அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. ஒரு நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருப்பது. இப்படி ஒரு வசதி செய்யபட்டிருப்பதால் இஷ்டத்திற்கு எடுத்தவிட்டு மோசமான நிலையில் கூட திரும்ப கொண்டுவந்து கொடுக்கவும் நிற்பார்கள்.
இந்த பெரிய கூட்டத்தை பார்த்ததுமே என்மனைவி சொல்லிவிட்டாள், நமக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தில் காத்து நின்று திரும்ப கொடுக்க வேண்டாம், போய் விடுவோம்.
நான் இவ்வளவு தூரம் வந்த்துவிட்டு கொடுக்காமல் போனால் சரியில்லை. நான் வரிசையில் நிற்கிறேன். நீ போய் உட்கார்ந்துகொள் என்றேன். என்னுடைய முறை வந்தது. அது என்மனைவியின் வங்கி அட்டையில் வாங்கியதால் அவளின் அட்டையை கொடுத்தேன். அந்த பெண் என்னையம் பார்ப்பாள் கணினியின் திரையையும் பார்ப்பாள். ஆனால் என்னிடம் எதையும் கேட்கவில்லை. இதற்கிடையில் பக்கத்து சேவையில் உள்ளவர்கள் பணம் திரும்பபெற்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.
நான் இவ்வளவு காலதாமதம் ஏன்? என வினவவும் அவள் சொன்னாள். இது உன் அட்டையில்லையே! நான் சொன்னேன், இது என் மனைவியின் அட்டை. காரணம் Mrs Selvaraj என திரையில் தெரிந்ததுதான். இதற்குள்ளாக அவள் காவலர்களை அழைத்து இரண்டு காவலர்கள் வந்து என்னை விசாரிக்க தொடங்கிவிட்டனர். இது திருட்டு அட்டையென நினைத்து விட்டார்கள். நான் என் மனைவியின் அட்டை. கூட்டம் அதிகமானதால் அவள் அங்கே அமர்த்திருக்கிறாள் என்றேன். இதற்கிடையில் காவலர்களை கண்டவுடன் அவளும் ஓடி வந்துவிட்டாள் நல்ல வேளையாக என்னிடம் என் ஓட்டுனர் உரிமம் இருந்ததால் நான் Selvaraj என்பதை உறுதி செய்துவிட்டார்கள். கூடவே மனைவியும் இருந்ததால்.
இல்லையென்றால் வீண் பிரச்சனையாகி இருக்கும். இரண்டு பேருக்குமே திட்டு தந்து எச்சரித்து விட்டார்கள். என்ன இருந்தாலும் இது சட்டப்படி குற்றமே! பிறர் வங்கி அட்டையை பயன் படுத்துவதை தவிருங்கள்.
4 கருத்துகள் :
Thanx 4 sharing!
நல்ல வேளை
எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே
யூர்கன் க்ருகியர் said...
Thanx 4 sharing!
//வருகைக்கு நன்றி!//
நிகழ்காலத்தில்... said...
நல்ல வேளை
எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே
//வருகைக்கு நன்றி நண்பரே!//
கருத்துரையிடுக