.

Loading...

ஞாயிறு, 22 மார்ச், 2009

வத்திகானிலிருந்து வந்த படம்!

வத்திகானிலிருந்து வந்த படம்.



தடைகள் நன்மைக்கே! என் வாழ்கையில் வருகின்ற ஒவ்வெரு தடைகளும் பின்னர் நன்மைக்காகவே இருக்கும்.இதற்க்கு பல நிகழ்வுகளை சொல்லலாம். ஆனால் ஒரு சிறிய நிகழ்வை இப்போது சொல்கிறேன்.

நாங்கள் வீடு மாறி செல்லும்போது வீட்டை மந்திரிப்பதற்காக குருவானவரை அழைத்திருந்தோம். அந்த குறிப்பிட்ட தியதிக்கு முன்னர் நல்ல ஒரு இயேசு கிறிஸ்துவின் படத்தை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தேடியும் மனதிற்கு பிடித்த மாதிரி படங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடு என்றுதான் பெயரே ஒழிய வேறொன்றுமில்லை. நம்மூர் மாதிரி பக்தி படங்கள் கிடைப்பது அரிது. சில கடைகளில் சில நாட்கள் கழித்து வரும் என்று சொன்னார்கள். ஆனால் சொன்ன நாளில் வரவில்லை. இப்படியே கடைசி வரை இயேசு கிறிஸ்துவின் படம் வாங்க முடியாமலே போய்விட்டது. மனதிற்கு ஒரே வேதனையாகவும் இருந்தது. காரணம் அடுத்த நாள் காலையில் குருவானவர் வீட்டை மந்திரிக்க வருவார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட காலையும் வந்தது. குருவானவர் என்னை தொலைபேசியில் அழைத்து கேட்டார். இயேசு கிறித்துவின் படம் உன் வீட்டில் உள்ளதாவென. நான் படம் கிடைக்க வில்லையென விளக்கி சொன்னேன். உடனே குருவானவர் சொன்னார்.வருத்தப்படாதே
சென்ற வாரம்


நான் வத்திக்கான் போயிருந்தபோது அங்கிருந்து ஒரு அழகிய படம் கொண்டுவந்துள்ளேன். அதை உங்களுக்கு தருகிறேன் என்றார். பாருங்கள் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை கட்டப்பட்டுள்ள வத்திகானிலிருந்து எங்களுக்காக தேவன் அந்த குருவானவரின் வழியே எங்களின் வீட்டிற்க்காக கொடுத்தனிப்பியுள்ளார்.

70cm x 110cm உள்ள அந்த படத்தை தான் இன்று எங்கள் வீட்டில் வைத்துள்ளோம். ஆக படம் இங்கு வாங்க கிடைக்காமல் தடையாக இருந்தது நன்மைக்கே!

எங்கள் வீட்டை மந்திரித்து ஆசீர்வதித்த தந்தை ஜோசப்பிற்கு எங்கள் நன்றி.

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!