.

Loading...

திங்கள், 14 ஏப்ரல், 2014

குமரியை தொட்ட ரயிலுக்கு வயது 35!


எல்லா விசயத்திலும் முன்னோடியான கன்னியாகுமரி மாவட்டம் ரெயில் விசயத்தில் மட்டும் பின்னோடியாகிப்போனது. தமிழகத்தின் பல பகுதிகளும் ரெயில் வசதியை பெற்றிருந்தாலும் குமரி மாவட்டம் என்னவோ இந்த வசதியை 1979-ஆம் ஆண்டு வரை இழந்தே இருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, இந்தியாவின் இரு முனைகளான காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் ரெயில் திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திர காந்தி அவர்கள், 06/09/1972-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.
இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும், கேரளா முன்னாள் முதல்வர் அச்சுத மேனோனும் கலந்து கொண்டனர். சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் இந்த பணிகள் முழுமை அடைந்தன. இதன் பின்னர் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் 15/04/1979-ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.
அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த மது தண்டவதே அவர்கள் முதல் ரயிலை கன்னியாகுமரியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று 35 வருடங்கள் ஆனாலும் கோட்டத்தோடு இணைத்த விசயத்தில் கோட்டை விட்டுவிட்டோம் என்பதே உண்மை! தகவல் மற்றும் மேலதிக தொடர்புகளுக்கு: P.Edward Jeni Secretary Kanyakumari District Railway Users' Association (KDRUA) IInd Floor, 4 Gandhi Street, Kottar, Nagercoil -629002, Kanyakumari District G.S.M : +91 9443002949 Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!