.

Loading...

ஞாயிறு, 23 மார்ச், 2014

எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!


எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை உணர்த்தும் பேனா!
அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருக்கின்ற ஜெர்மன் தயாரிப்பான பேனா, நாம் எழுதும் போது எழுத்துப் பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தால் உடனே அதிர்வை உண்டாக்கி நம்மை உணர்த்தும். இதன் கண்டுபிடிப்பாளரின்(Falk and Mandy Wolsky) மகனின் எழுத்து பிழையே இதனை உருவாக்க காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். பலரையும் கவரும் இந்த பேனா AAA பேட்டரியால் இயங்கும். கூடவே இது கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் இணைப்பை ஏற்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் சரியாக தெரியவில்லை, எனினும் $100- களாவது இருக்கும் என நம்பப்படுகிறது. இது பென்சில் பால்பாயிண்ட் மற்றும் மை என மூன்று விதத்திலும் பயன்படுத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மையோ காகிதமோ தேவையில்லை. கூடவே பல வண்ணங்களில் வருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள அவர்களின் இணைப்பை பயன்படுத்துங்கள்!
தொடர்புக்கு: http://www.lernstift.com/press_en.html

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!