அரபு நாடுகளில் மக்களாட்சி!
அடக்கு முறை ஆட்சியாளர்களிடமிருந்து அரபு மக்களுக்கு சீக்கிரமே விடுதலை கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது, இப்போது நடந்து வரும் போராட்டங்களின் வழியே தெரிகிறது. இப்போது துனிசியா, எகிப்து மக்களின் வெற்றியை பார்த்த எமன், அல்ஜீரியா, ஈரான், பஹ்ரைன் நாட்டு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்! இப்படி தொடர்ந்திடும் போராட்டம் இன்னும் மீதியுள்ள மன்னராட்சி என அறியப்படும் சர்வாதிகள் ஆளுகின்ற நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு குடியரசுகள் போன்றவற்றிலும் தொடர்ந்திட வேண்டும்.
நேற்று ஈரான் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
உலகம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும், தன் குடும்ப சொத்துபோல ஆண்டுவரும் இந்த சர்வாதிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களே அவர்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த அரபு மன்னர்களின் குடும்பங்கள் தான் முதலீடு செய்துள்ளனர். பெட்ரூளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இவர்கள் கொள்ளையடித்து தங்களின் முதலீட்டிற்கு பயன் படுத்துகிறார்கள். இவ்வளவு எண்ணெய் வளம் உள்ள சவுதி அரேபியாவில் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
நேற்று அல்ஜீரியா நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் சவுதி அரேபியாவில், சட்டத்திற்கு எதிரான அனைத்து பொருட்களும், போதை பொருட்கள் உள்பட விமான நிலையத்தின் "ராயல் டெர்மினல்" என சொல்லப்படும், ராஜ குடும்பத்திற்கான பிரத்யோக நுழைவு வாயிலின் வழியே கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்த சட்டவிரோத செயல்களின் தலைமையாக இளவரசர்களே செயல் படுகின்றனர்! தாய்லாந்து லாட்டரி இங்கு மிகவும் பிரபலமானது. இதை நடத்துவது ஒரு இளவரசர்தான்.
நேற்று பஹ்ரைன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
செயற்கைகோள் தொலைக்காட்சி உபகரணங்கள் இங்கு சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருளாம். ஆனால் உலகத்திலேயே அதிக அளவில் செயற்கைக்கோள் நிகழ்சிகளும், அதற்கான உபகரணங்களும் சவுதியில் மிக சாதரணமாக கிடைக்கும். சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக அளவில் நீலப்படம் பார்பவர்கள், இந்த சவுதி அராபிய மக்களாகத்தான் இருக்கும். இது ஒவ்வருவரின் வீட்டு கூரையை பார்த்தால் தெரியும். நான்கு ஐந்து டிஷ் ஆண்டனா பொருத்தியிருப்பார்கள். இந்த உபகரணங்கள் சட்ட விரோதமெனில் எப்படி நாட்டிற்குள் நுழைகிறது என்பது அந்த இளவரசர்களுக்கே வெளிச்சம்!
நேற்று எமன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
இப்படி நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கும் இந்த சர்வாதிகளிடமிருந்து விடுபட்டு மக்களாட்சி மலரவேண்டும். அதற்கு பிற நாடுகளும் உதவிட வேண்டும்.
இப்போது பக்கத்துக்கு நாடுகளின் புரட்சியை கண்டு நிஜத்தில் எல்லா அரபு மன்னர்களும் பீதியில்தான் உள்ளார்கள்! தங்களின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதனை நினைத்து.
10 கருத்துகள் :
உங்களின் மக்களாட்சி லட்சனம்தான் உலகெங்கும் தெரிகிறதே ,இந்தியாவின் மெகா உழ்ல்கள் உலகெங்கும் நாறுகிறதே, முதல்ல உங்க நாட்டத் திருத்துங்கப்பு
moulefrite said...
உங்களின் மக்களாட்சி லட்சனம்தான் உலகெங்கும் தெரிகிறதே ,இந்தியாவின் மெகா உழ்ல்கள் உலகெங்கும் நாறுகிறதே, முதல்ல உங்க நாட்டத் திருத்துங்கப்பு
//நான் மக்களாட்சியில் ஊழல் இல்லையென சொல்லவில்லையே! ஆனால் மக்களாட்சியில் ஊழல்வாதிகளை தேர்தலின் மூலம் எம்மால் வீழ்த்தமுடியும் நண்பரே!//
நம்ம ஊரில் ஜனநாயகம் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களையும் குடும்ப ஆட்சி நடத்துபவர்களையும் பற்றி தினமும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறதே... கொள்ளை என்றால் மகா கொள்ளையாச்சே..
s , u r right
senthil,doha
manjoorraja said...
நம்ம ஊரில் ஜனநாயகம் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களையும் குடும்ப ஆட்சி நடத்துபவர்களையும் பற்றி தினமும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறதே... கொள்ளை என்றால் மகா கொள்ளையாச்சே.
//இந்த தேர்தலில் இந்த கொள்ளைக்கும்பலுக்கு இருக்கு ஆப்பு, கவலைப்படாதீர்கள்!//
Senthil said...
s , u r right
senthil,doha
//Thanks Senthil!//
ஏண்ணே நம்ம ஆள்கள் 4 காசு சம்பாதிக்கிறதூல என்ன கோபம்? அரப்ல அமைதி போனா நமக்கு தான் நஸ்டம்
shanuk2305 said...
ஏண்ணே நம்ம ஆள்கள் 4 காசு சம்பாதிக்கிறதூல என்ன கோபம்? அரப்ல அமைதி போனா நமக்கு தான் நஸ்டம்
//மக்களாட்சியின்னா அமைதியில்லை என சொல்லுகிறீர்களா? இந்தியாவை மட்டும் பார்க்காதீர்கள். ஐரோப்பாவை பாருங்கள்//
அண்ணா ஆபாசப்படம் அதிகம் பார்பவர்கள் அரபுகள் னு சொல்றீங்க...இருந்துட்டு போகட்டும். ஆனால் அதில் அதிகம் நடிப்பவர்கள் யார்னு உங்களுக்கே தெரியும். எல்லாம் அமெரிக்கா போன்ற மேலை நாட்டு மக்கள்தான்.
BHEL said...
அண்ணா ஆபாசப்படம் அதிகம் பார்பவர்கள் அரபுகள் னு சொல்றீங்க...இருந்துட்டு போகட்டும். ஆனால் அதில் அதிகம் நடிப்பவர்கள் யார்னு உங்களுக்கே தெரியும். எல்லாம் அமெரிக்கா போன்ற மேலை நாட்டு மக்கள்தான்.
//உங்கள் கருத்திற்கு நன்றி பெல்!//
கருத்துரையிடுக