.

Loading...

புதன், 24 பிப்ரவரி, 2010

ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டரை கோடி ரூபாய்!

ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டரை கோடி ரூபாய்!

இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகிய இருவராலும் 1906- இல் துவக்கபட்ட இந்த கார் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ் பெற்றது . ஒரு காலத்தில் இங்கிலாந்து அரசே ஏற்று நடத்தினாலும் பின்னர் தனியார் வசமாகி இப்போது பிரபல BMW கார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. பெரும் பணக்கார புள்ளிகளுக்காகவே தயாரிக்கப்படும் கார் இவை. இந்தியாவில் மறைந்து போன


தத்துவ ஞானியான ரஜ்னீஷ்தான் உலகிலேய அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தன் ஆஸ்ரமத்தில் வைத்திருந்தாராம். 64 ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தார் என படித்த ஞாபகம்.

கீழே கொடுத்திருக்கும் கார் இந்த வருடத்தில் தயாரிக்க பட்டது.




இந்த வருடத்திற்கான புதிய ரோல்ல்ஸ் ராய்ஸ் க்ஹோஸ்ட் கார் இந்தியாவில் இரண்டரை கோடி ரூபாயென விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்திற்கு ஒரு குட்டி விமானமே வாங்கி விடலாம். ஆனால் இங்கிலாந்தில் இதன் விலை சுமார் ஒரு கோடியே ஐம்பத்தியாறு லட்சம் என விற்பனைக்குள்ளது. இந்த காரில் அம்மாவாசை இருட்டாக இருந்தாலும் சுமார் முன்னூறு மீட்டர் தூரத்தில் வரும் நபர்களையும் அடையாளம் காணும் வசதியுடைய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் எல்லா நவீன காரில் உள்ள வசதிகளும் இதில் உண்டு.







எதோ புதிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்குத்தான் இந்த விலை என நினைக்காதீர்கள், பழைய கார்களும் கோடிக்கணக்கில் விற்பனை போகிறது.

1924 கார் ஒரு கோடியே நாலு லட்ச்சத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



1928 உள்ள கார்கூட ஒரு கோடிக்குமேல் விலையுள்ளது.




1938 கார் சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இப்படி கோடிகளை கொட்டி இந்த கார்களை வாங்க கோடீஸ்வரர்களின் கூட்டம் உலகெங்கும் இருக்கிறது.

2 கருத்துகள் :

Tech Shankar சொன்னது…

வினோத தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

அன்புடன்

டெக்‌ஷங்கர் @ TechShankar

Glorious World Record Moments - Sachin Tendulkar 200 Runs

Selvaraj சொன்னது…

Tech Shankar

வினோத தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

//வருகைக்கு நன்றி ஷங்கர்!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!